Followers

Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Thursday, October 6, 2011 24 comments

இதுவும் போன பதிவு ரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும். . .(Part - 2).  வின் தொடர் பதிவுதான் . 
           இந்த ரகசிய கேமராக்கள் பெரும்பாலும் முகம் பார்க்கும் கண்ணாடி பின்னாடி கூட மறைத்து வைக்கப்படுகிறது  ஏனென்றால் அந்த இடம் தான் யாருக்கும் அவ்வுளவு சீக்கிரமாக சந்தேகம் வராத இடம் . இது எங்கு எல்லாம் நடக்கிறது என்று பார்த்தால் முன்பு சொன்னது போல பெரிய ஷொப்பிங் மால்களில் உள்ள பாத் ரூம்களில் , முக்கியமாக பெரிய துணிக்கடைகளில் பெண்கள் உடை மாற்றி சரி பார்க்கும் அறைகள் ( Trail Rooms ), பெரிய ஹோட்டல் ரூம்களில் உள்ள கண்ணாடிகள் மற்றும் ஹோட்டல் ரூம்களில் உள்ள குளியல் அறைகளில் உள்ள பெரிய கண்ணாடிகளின் பின்னால் வைக்க சாத்தியங்கள் அதிகம் . அதனால் பெண்கள் இனிமே கண்ணாடி முன்பு நின்று கொண்டு அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். முடிந்த வரை நிர்வாணம் ஆகாமல் தவிர்க்கவும். 
          இது போன்று ஹோட்டல் அறைகளில் வைக்கப்படும் கண்ணாடிகளை நீங்கள் சினிமாக்களில்  கூட பார்த்து இருக்கலாம் . "பில்லா 2007" படம் அனைவரும் பார்த்து இருக்கலாம் அதில் ஒரு காட்சி வரும் பில்லா அஜித்தை கைது செய்து மலேசியா போலீஸ்சார், விசாரிக்க ஒரு தனி அறையில் உட்கார வைத்து இருப்பார்கள் அப்போது அந்த அறைக்குள் இரண்டு போலீஸ் ஆபீஸ் மட்டும் இருப்பார்கள் அந்த அறையின் ஒரு சுவற்றில் ஒரு பெரிய கண்ணாடி இருக்கும் , அந்த கண்ணாடி அறைக்குள் இருந்து பார்க்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடி போல இருக்கும் ஆனால் அந்த கண்ணாடிக்கு பின்னால் இருந்து ஒரு குழு விசாரணையை கவனித்து கொண்டும், பதிவு செய்தது கொண்டும் இருக்கும். இந்த வகை கண்ணாடிகள்தான் இந்த ரகசிய கேமராக்கள் வைப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். இப்போது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் . நீங்க எந்த கவலையும் இல்லாமல் ஹோட்டல் பாத் ரூமில் ஒய்யாரமாக நிர்வாணமாக குளித்து கொண்டு இருக்கும் போது அந்த பாத் ரூமில் உள்ள பெரிய கண்ணாடிக்கு பின்னால் யாராவது சாவகாசமாக நாற்காலி போட்டு உட்கார்ந்தது ரசித்து கொண்டு கூட இருக்கலாம், கேமராவில் வீடியோவாக பதிவு செய்தது கொண்டு இருக்கலாம் ஜாக்கிரதை. 
         இந்த வகை கண்ணாடிகளுக்கு பொதுவான பெயர் Reflecting Glasses இதில் double reflecting , strong reflecting அப்படியென்று நிறைய வகை உண்டு. அதனால் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் Mirror க்கும் , Reflecting Glasses க்கும் உள்ள வித்தியாசத்தை. 
சரி இந்த வகை தில்லாலங்கடி கண்ணாடிகளை எப்படி கண்டு பிடிப்பது? 

 Reflecting Glass -சை  கண்டுபிடிக்க எளிய வழி முறைகள் :


1. ஹோட்டல் அறைகளில் அல்லது உடை மாற்றும் அறைகளில் உள்ள கண்ணாடி மேல் உங்கள் ஆள் காட்டி விரலை வையுங்க இப்போது உங்க ஆள்காட்டி விரலின் நுனிக்கும் , கண்ணாடியில் தெரியும் பிம்பம் ஆள்காட்டி விரலின் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்கும் நுண்ணிப்பாக கவனிக்கவும் கண்டிப்பாக இடைவெளி சிறிய அளவில் இருக்கும் . அப்படி இருந்தால் அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி . உங்களுக்கு சந்தேகம் என்றால் உங்க வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியில் செய்து பாருங்கள். ஆனால் இந்த Reflecting Glass வகை கண்ணாடிகளில் உங்கள் ஆள் காட்டி விரலை வைத்தால்  இது போன்று உங்கள் ஆள் காட்டி விரலுக்கும் , பிம்பமாக தெரியும் ஆள்காட்டி விரலுக்கும் இடைவெளி இருக்காது. 
அதனால் இது போன்று சூழ்நிலைகளில் உங்கள் கை பையில் எப்பவும் ஒரு சிறிய முகம் பார்க்கும் வைத்து கொள்ளவும் . உங்கள் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியையும் , உங்கள் ஹோட்டல் அறைகளில் இருக்கும் கண்ணாடி இரண்டையும் இது போல் ஆள் காட்டி விரல் வைத்து சோதித்து பாருங்கள் உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும்.  

2. உங்கள் கைப்பையில் எப்பவும் ஒரு சிறிய டார்ச் லைட் வைத்து கொள்ளுங்கள் இது போன்று கண்ணாடிகளில் டார்ச் லைட் அடித்து பார்த்தல் அதில் ஒளி ஊடுருவுகிறதா என்று பாருங்க. ஒளி ஊடுருவினால் அது Reflecting Glass , இல்லை என்றால் அது  முகம் பார்க்கும் கண்ணாடி. 

3. இது ரொம்ப எளிய முறை , இது ரொம்ப சிம்பிள்  உங்கள் முகத்தில் இரண்டு பக்கமும் குதிரைக்கு கடிவாளம் போல உங்கள் கைகளை வைத்து கொண்டு நீங்கள் சந்தேகம்ப்படும் கண்ணாடியில் முகத்தை வைத்து பார்த்தால்  கண்ணாடிக்கு பின்னால் ஏதும் தெரிகிறதா என்று பாருங்கள். சூரிய ஒளியை குறைக்க கார் கண்ணாடிகளில் கருப்பு கண்ணாடிகள் பொருத்தி இருப்போம் இல்லையா அதில் நாம் சில நேரம் முகத்தை மிக அருகில் வைத்து பார்ப்போம் இல்லையா கார்க்குள் என்ன இருக்கிறதென்று அது போல கை வைத்து பாருங்கள். கண்டிப்பாக வித்தியாசத்தை பார்க்கலாம்.

       சரி இது வரை பார்த்தது எல்லாம் மற்றவர்கள் நம்மை ரகசியமா படம் பிடிப்பதை பற்றி . ஆனால் இன்றைய நிலைமையில் இணையதளத்தில் பார்த்தீர்கள் என்றால் சிலர் அவர்களே சொந்தமாக எடுத்த அந்தரங்க புகைப்படமோ , வீடியோவோ அப்பட்டமாக வெளியிடப்படுகிறது. அதற்க்கு பெயர் Scandal videos அப்படின்னு நிறைய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் உலாவருது இணையதளத்துல. 

    சில தம்பதிகள் தேனிலவுக்கு போகும் போதோ அல்லது இளம் காதல் ஜோடிகள் தனிமையில் சந்திக்கும் போதோ ஏதோ ஒரு ஆர்வத்தில் ,மன கிளர்ச்சிகாக வேண்டி  அவர்களின் சொந்த மொபைல் போன் கேமராவிலோ அல்லது டிஜிட்டல் கேமராவிலோ படம்  எடுக்கிறார்கள்.அப்படி படம் பிடிப்பது சரியா தவறா என்ற விவாதத்திற்கு நாம் போக  வேண்டாம். அதெல்லாம் அவர்கள் சொந்த விருப்பங்கள் அதில் நான் தலை இட விரும்ப வில்லை . 
          ஆனால் சொந்த கேமராவில் எடுக்கப்படும் அந்தரங்க நிர்வாண படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது? கண்டிப்பாக அதில் சம்பந்த பட்டவர்கள் வெளியிட்டு இருக்க மாட்டார்கள் . யாரும் அவருடைய அல்லது அவர் மனைவியுடைய அல்லது காதலியின்  நிர்வாணத்தை மற்றவர்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் , அவ்வுளவு ஏன் அப்படி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இது எப்படி சாத்தியம் ஆகிறது ? 
மேட்டர் ரொம்ப சிம்பிள் , முன்பெல்லாம்  புகைப்படங்கள் பிலிம் ரோலிலும் , வீடியோக்கள் கேசட்களிலும் பதிவு செய்யப்பட்டன ஆனா இன்று நிலைமையே வேறு , எல்லாம் டிஜிட்டல் மாயம் . அதனால் நீங்க எடுக்கும் புகைபட்மோ , வீடியோவோ எல்லாம் மொபைலில் அல்லது டிஜிட்டல் கேமராவிலோ உள்ள மெமரி கார்டில் (memory card) தான் பதிவாகிறது . இந்த மெமரி கார்டு தான் நமக்கு நேரடி வில்லன். 

           எதார்த்தமாக , தனிமையில் பின்னர் Delete பண்ணிவிடாலம் என்று  தம்பதிகள் எடுக்கும் படங்கள் அனைத்தும் இந்த மெமரி கார்டில் தான் பதிவாகிறது. என்னதான் தம்பதிகள் கவனமாக பின்னர் தங்கள் அந்தரங்க படங்களை delete செய்தாலும் அது முழுமையாக அழிவது இல்லை . உதாரணத்துக்கு உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் delete செய்யும் File உடனே Recycle Bin யில் போய் உட்கார்ந்து கொள்ளும் அது மாதிரி இந்த மெமரி கார்டுளையும் நீங்கள் delete செய்த படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இருக்கும் . நீங்கள் எல்லாம் முழுமையாக delete செய்து விட்டதாக நினைத்து கொண்டு மற்ற புகைப்படங்களை பிரிண்ட் போட போட்டோ ஸ்டுடியோ வுக்கு குடுக்கும் போது அங்கே சிலர் இந்த மெமரி கார்டுயில் ஒளிந்து கொண்டு இருக்கும் படங்களை வெளியே எடுக்கிறார்கள். அதற்க்கு என்று பிரதேகமாக சாப்ட்வேர் இருக்கிறது. அதற்க்கு Recovery Software. இந்த சாப்ட்வேர் Delete ஆனா file களை திரும்ப வரவைக்கும். இது நமது கம்ப்யூட்டர் இருகின்ற மெமரியில் delete ஆனா file களை கூட திரும்ப பெற உதவும் சாப்ட்வேர் . இந்த மெமரி கார்டு யார் கையில் கிடைத்தாலும் பிரச்னை தான் . அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் நெருக்கின நண்பராக கூட இருக்கலாம் .இப்படிதான் தங்களுடைய கேமராவில் தங்கள் கைப்பட எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்தான் எடுத்தவர்களுக்கே தெரியாமல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
சரி இதை எப்படி தவிர்க்கிறது? 

டிஜிட்டல் கேமரா மற்றும் மொபில் கேமரா -கவனத்தில் கொள்ள வேண்டிய விஷியங்கள் :

1. முதலில் தங்களுடைய டிஜிட்டல் கேமராவிலோ அல்லது மொபைல் போன் கேமராவிலோ தங்களுடைய நிர்வாண படங்களை எடுப்பதை தவிர்த்து விடுங்கள் முக்கியமாக தேனிலவு தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. ஒரு வேலை அப்படி தங்களுடைய அந்தரங்கங்களை படம் எடுக்கும் பட்சத்தில் அந்த மெமரி கார்டை கண்டிப்பாக யாரிடத்திலும் குடுக்க வேண்டாம். குறிப்பாக போட்டோ ஸ்டுடியோவுக்கு அதில் உள்ள வேற சாதாரண போட்டோவை பிரிண்ட் போட குடுக்க வேண்டாம்.  

3. அந்த மெமரி கார்டில் உள்ள உங்கள் அந்தரங்க போட்டோக்களை Delete செய்தால் மட்டும் போதாது . கண்டிப்பாக மெமரி கார்டை Format செய்ய வேண்டும் அப்போதான் முழுமையாக எல்லாம் அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது.




                                                       உங்க WEBCAM ஜாக்கிரதை . . .


          சரி இப்போது நான் இந்த பதிவின் தலைப்புக்கு வருகிறேன் . உங்கள் கம்ப்யூட்டர்லியோ அல்லது லேப்டாப்லியோ வெப்காம் இருக்குமாயின் அதை உங்கள் அனுமதி இல்லமால் யாரேனும் ஆன் செய்தது உங்களை பார்க்க முடியுமா? முடியும் என்கிறது Technology . ஆம் நீங்கள் Gtalk லியோ அல்லது Yahoo Messenger லியோ ஆன்லைனில் இருந்தால் உங்கள் Friends லிஸ்ட்யில்  இருபவர்களால் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் வெப்காமை ஆன் செய்ய முடியும். அதற்க்கு ஆதார வீடியோ கூட இருக்கிறது ஆனால் அந்த வீடியோவை நான் இங்கு இணைக்க வில்லை ஏனென்றால் அந்த வீடியோவில் எப்படி மற்றவர்கள் வெப்காமை அவர்கள் அனுமதி இல்லாமல் ஆன் செய்வது அதற்க்கு என்ன சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய வேண்டும் எல்லாம் இருக்கிறது . அப்புறம்  தெரியாத ஒரு தப்பான விஷியத்தை நானே சொல்லி குடுத்தார் போல் ஆகிவிடும். அதனால் விஷியத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் .

இதில் இருந்து தப்பிக்க : 

1. நீங்கள் கம்ப்யூட்டரில் தனியாக வெப்காம் வைத்திருப்பார்களானால் , நீங்கள் வெப்காமை உபயோகிக்காத போது கம்ப்யூட்டரில் இருந்து வெப்காம் இணைப்பை துண்டித்து விட்டு தனியாக வைக்கவும் . அவசியம் இருக்கும் போது மட்டும் கம்ப்யூட்டர் உடன் இணைக்கவும் . 
 
2. நீங்கள் லேப்டாப் உபயோகிப்பவரானால் அதில் வெப்காம் ஸ்க்ரீன் உடன் இணைக்க பட்டு இருக்கும் அதை தனியாக கழட்டி வைக்க முடியாது ஆனால் வெப்காம் லென்ஸ்சை மூடி வைக்கலாம் இல்லையா? ஆமா லேப்டாப் வெப்காம்மில் உள்ள லென்ஸ் மேல் ஒரு ஸ்டிக்கராய்அல்லது ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி வையுங்கள் . உங்கள் அனுமதி இல்லாமல் வெப்காம் ஆன் செய்தாலும் எதுவும் பார்க்க முடியாது .



டிஸ்கி : 
இந்த  பதிவு கண்டிப்பாக அனைவரும் படித்து தெரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி எழுதியது அதனால் இதை படிபவர்கள் தயவு செய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும்  கொண்டு செல்லுங்கள் , முக்கியமாக பெண்களிடத்தில் கொண்டு செல்லுங்கள் . நன்றி.

      இந்த பதிவுகள் அனைத்தும் விழிப்புணர்வுகளுக்காக மட்டுமே எழுதப்பட்டது  அதனால் தயவு செய்தது இதில் உள்ள நல்ல விஷியங்களை மட்டும் எடுத்து கொள்ளவும் . தேவை இல்லாத விஷியங்களை தவிர்த்து விடவும் . ஆகவே இதை படித்த அனைவரும் கவனமாகவும் , ஜாக்கிதையாகவும் நிம்மதியாகவும் வாழ்வோமாக என்று வாழ்த்தி ...



அன்புடன் ,
ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com





Thursday, September 29, 2011 20 comments


         போன பதிவு "ரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும்". . .(Part - 2) . -இல் நான் சொன்னது எல்லாம் கண்காணிப்பு கேமராகளை பற்றிதான் , ரகசிய கேமராகளுக்கான ஒரு முன்னுரையை மட்டும்தான் நான் குடுத்து இருந்தேன் . கண்காணிப்பு கேமராகளுக்கும் , ரகசிய கேமராகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு . கண்காணிப்பு கேமராக்கள் என்பது பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பட்டமாய் எல்லாருக்கும் தெரிகிற மாதிரி அதிகார பூர்வமாக பொது இடங்களில் வைக்கப்படுவது, அதற்க்கு பெயர் Security Camera  அல்லது  CCTV Camera (Closed Circuit Television Camera ). அதுவே தனிமனித சுதந்திரம் பறி போவதாக வருத்தப்பட்டு இருந்தேன் . ஆனால் ரகசிய கேமராக்கள் என்பது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒளித்துதோ அல்லது மறைத்தோ வைக்கபடக்கூடிய சிறிய வகை கேமராக்கள் . இதன் நோக்கம் உளவு பார்ப்பதற்காகவோ அல்லது வேறு சில வக்கிர உள்நோக்கங்களுக்காகவோ வைக்கப்படுபவை.
இந்த ரகசிய கேமராகளுக்கு நிறைய பெயர்கள் உண்டு Spy Cam , Candid Cam , Hidden Cam , Secret Cam என்று பல பெயர்கள்.  சரி அப்படி இந்த கேமராக்களை வச்சுக்கிட்டு அப்படி என்னதான் பண்ணுறாங்க ? கேட்டிங்கனா ரொம்பவே அதிர்ச்சி ஆகிடுவிங்க .
         நான் கட்டுமான பொறியாளராக இருப்பதால் சமீபத்தில் ஒரு மிக பெரிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தேன் , அந்த கட்டிடம் ஒரு மிக முக்கியம் வாய்ந்த கட்டிடம் ஆகையாதால் அந்த கட்டிடத்துக்கு சில பல ரகசிய கேமராக்கள் பாதுகாப்பு காரணாங்களுக்காக  பொறுத்த வேண்டி இருந்தது அந்த கட்டிடத்தின் உரிமையாளர் குழுமம் கேட்டு கொண்டதுக்கு இணங்க . அப்போது அதற்க்கு தேவையான ரகசிய கேமராக்கள் வாங்க வேண்டிய பொறுப்பு நான் பணியாற்றும் கம்பெனிக்கு வந்தது. அப்போது கேமராக்கள் வாங்க வேண்டி அதற்கான தகவல்கள் திரட்டப்பட்டு சில கம்பெனிக்கள் விவரம் கிடைக்க, அந்த கேமரா கம்பெனிகளிடம் மேலும் தகவல்கள் , மாடல்  மற்றும் விலை விவரங்கள் கோரப்பட்டன . அதில் சில கம்பெனிகள் குடுத்த கேமரா மாடல் விவரங்கள் அடங்கிய புத்தகத்தை (Catalog)  பார்த்த போது நான் சற்று இல்ல நிறையவே அதிர்த்துதான் போனேன் . சொன்ன நம்ப மாட்டிங்க இதை பற்றிய விவரம் எவ்வளவு பேருக்கு இன்னும் தெரியும் என்று தெரியவில்லை , அந்த ரகசிய கேமராக்களின்  மாடல்கள் உண்மைலயே பேரதிர்ச்சியை உண்டாக்கின . கதவு கை புடி  , கடிகாரம்  , சுவிட்ச் , சுவிட்ச் போர்டு , பல வகை லைட்  வடிவத்தில் , அலங்கார விளக்குகள் , பொம்மைகள் , குளியல் அறையில் லைட் , ஷவர் , வாட்டர் ஹீட்டர்  என எல்லா வடிவங்களிலும் கேமரா மாடல்கள் இன்றைய உலக சந்தையில் சர்வ சாதாரணாம கிடைக்கிறது. ரொம்ப சிம்பிள் அதை வாங்கி அப்படியே பொறுத்த வேண்டியதுதான் அதில் உள்ள உபகரணமும் வேலை செய்யும் , கேமராவ்வும் வேலை செய்யும். யாராலையும் கண்டேபிடிக்க முடியாது . ஏன் பேனா வடிவில் கூட சிறிய கேமராக்கள் வந்து விட்டன,  “மங்காத்த” படத்தில் அஜித் பேனா வடிவ கேமராவை உபயோகித்து இருப்பார். 

உங்களுக்காக  சில ரகசிய கேமராக்களின் படங்கள் கீழே : 

        இந்த கேமராக்கள் எங்கு எல்லாம் எப்படி எப்படி எல்லாம் சமூக விரோத தனமாக , வக்கிர எண்ணங்களுடன் உபயோக படுத்தப்படுகிறது? எல்லாம் பெரும்பாலும் ஹோட்டல் ரூம்களில் , ஹோட்டல் பாத் ரூம்களில் , துணி கடைகளில் பெண்கள்  உடை மாற்றும் அறைகளில்தான். பெரும்பாலும் எல்ல ஹோட்டல்கள் , குறிப்பாக நட்சத்திர ஹோட்டல்களிலும் இந்த வேலை நடக்கிறது. இதை எல்லாம் யார் செய்கிறார்கள் என்பது வேறு கதை , யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் , அதை பின்னர் விவாதிப்போம் . 
        இப்போது எல்லாம் நான் வெளியூர்களுக்கு போனால் தாங்கும் ஹோட்டல்களில் நட்சத்திர ஹோட்டல்களே ஆனாலும் , குளிக்கும் போது கோவணம் கட்டி கொண்டுதான் குளிக்கிறேன் , ஏனென்றால் இது போல ஏதாவது ரகசிய கேமராக்கள் பொறுத்தப்பட்டு இருக்குமோ என்கிற பயம் தான். இல்லை என்றால் அப்புறம் என்னுடைய பிறந்த மேனியை நானே இணையதளத்தில் பார்க்க நேரிடலாம் . என்னதான் பெண்களை குறி வைத்து கேமராக்கள் பொறுத்த பட்டு இருந்தாலும் , குளிக்கிறது ஆணா ? பெண்ணா ? என்று கேமராவுக்கு எங்கு தெரிய போகிறது அப்படி என்னையும் குளியல் காட்சியில் படம் பிடித்துவிட்டால் ? அதனால் தான் இந்த கோவண குளியல் .
      இன்றைய இணையதளத்தில் இந்த ரகசிய கேமராக்களை பயன்படுத்தி ஏகப்பட்ட அந்தரங்க , உடலுறுவு  மற்றும் நிர்வாண கட்சிகள் படமாக்கப்படுகின்றன பல வக்கிர கும்பல்களினால் . அதை இணையதளத்தில் வெளியிட்டு பணம் பார்க்கின்றனர். பாவம் ஹோட்டலில் தங்குபவர்களுக்கு இதை பற்றி எந்த விவரமும் தெரியாது . கேமரா பொறுத்தப்பட்டதோ , அவர்களின் அந்தரங்கங்கள் படம் பிடிக்கப்பட்டதோ எதுவும் தெரியாது. 
பெரும்பாலும்  இந்த வக்கிர கும்பல்களின் குறி அழகிய பெண்கள் மற்றும் இளம் தம்பதிகள் . அதிலும் தேனிலவுக்கு போகும் புது மண தம்பதிகள் என்றால் இந்த வக்கிர கும்பகளுக்கு ஏக கொண்டாட்டம். பெரும்பாலும் தேனிலவுக்கு போகும் இடங்களான சுற்றுலா தளங்களின் உள்ள ஹோட்டல்களில் இந்த அபாயம் அதிகம் உள்ளது. ஜாக்கிரதை .

    
      த்ரிஷா போன்று பிரபலங்களின் நிர்வாண குளியல் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சை ஆனது எல்லாரும் அறிந்ததே , ஆனால் பிரபலங்கள் மட்டும் அல்லாது சாமானிய குடும்ப பெண்களின் , தம்பதிகளின் நிர்வாண , அந்தரங்க உடலுறவு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கொட்டிகிடகின்றன இன்றைய இணையதளத்தில் .எப்படி இதெல்லாம் சாத்தியம் ஆகிறது? எல்லாம் இந்த ரகசிய கேமராக்களின் உதவியால்தான். ஹோட்டல்களில் தாங்கும் போது கண்டே புடிக்க முடியாத சிறிய வகை ரகசிய கேமராகளை பற்றி இது வரை யாராவது யோசித்து பார்த்து இருக்கிர்களா? கவலைப்பட்டு  இருக்கீர்களா? 

இனி கண்டிப்பாக கவலைப்படணும் , கவனமாய் இருக்கணும். 


இனி ஹோட்டலில் தாங்கும் போது கவனிக்க வேண்டிய , செய்ய வேண்டிய விஷியங்கள் :
1) தம்பதிகள் உடலுறவு கொள்வதை தவிர்த்து விடுங்கள் . 
2) அப்படியே உடலுறவு கொள்ளும் அவசியம் இருந்தால் முடிந்தவரை ஹோட்டல் அறையை இருட்டாக்கிகொண்டு விளக்குகளை அணைத்து விட்டு , போர்வைக்குள் நடக்கட்டும் . கேமரா கண்களில் இருந்து தப்பிக்க வேற வழி இல்லை .
3) பெண்கள் முடிந்தவரை உடையை கலையாமல் இருக்கவும் அறையுனுள் இருக்கும் போது. உடை மாற்றும் போது கூட கணவர் மட்டும்தானே இருக்கார் என்று கவனக்குறைவாக இருக்க வேண்டாம். இன்றைய சூழ்நிலையில் சுவர்களுக்கு கூட (கேமரா)கண்கள் இருக்கலாம் .
4) அதே போல் பெண்கள் குளிக்கும் போது முடிந்தால் உடம்பை மறைக்க ஏதாவது துணி கட்டிக்கொண்டு குளிக்கவும்.

      இதையெல்லாம் செய்ய சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும் ஆனால்  ரகசிய கேமரா கண்களுக்கு இரை ஆகி ,
வக்கிர மனம் கொண்டவர்களின் கண்களுக்கு விருந்தாகாமல் நம்மை பாதுகாத்து கொள்ள வேற வழி இல்லை .

       சரி இது எல்லாம் நமக்கு தெரியாமல் ரகசிய கேமராகளால் நமக்கு வரும் பிரச்சனைகள் . ஆனால் சிலர் ஆர்வ கோளாறினாலும் , சில தம்பதிகள் அவர்கள் அந்தரங்களை அவர்கள் உபயோகத்திற்காக சொந்த கேமராவிலோ அல்லது மொபைல் கேமராவிலோ எடுக்கும் நிர்வாண புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எப்படி வெளியுலகிற்கு , இணையதளத்திற்கு வருகிறது? அதை எப்படி எல்லாம் தடுக்கலாம் ? 

உங்கள் லேப்டாப் அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வெப்காம்களை மற்றவர்கள் உங்கள் அனுமதி இன்றி உங்களை எப்படி பார்க்க முடியும் ? அதை எப்படி தடுப்பது ? 

எல்லாம் அடுத்த பதிவில் . . .

டிஸ்கி : 
இந்த  பதிவு கண்டிப்பாக அனைவரும் படித்து தெரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி எழுதியது அதனால் இதை படிபவர்கள் தயவு செய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும்  கொண்டு செல்லுங்கள் , முக்கியமாக பெண்களிடத்தில் கொண்டு செல்லுங்கள் . நன்றி.
 
அதிர்ச்சிகளுடன், 


ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com




Monday, September 26, 2011 11 comments




Note :  இது ஒரு ஆய்வு பதிவு மட்டும் இல்ல , இது ஒரு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பதிவும் கூட அதனால நான் வார்த்தைகளை எந்த கட்டுப்பாடும்  இல்லாம எழுதி இருக்கேன். அதுக்காக பெண்கள் இதை படிக்காம போய்ட வேண்டாம் என்னென்றால் இது முக்கியமா பெண்கள்தான் அவசியம் படிக்கவேண்டும் .

           இந்த பதிவ படிக்குற உங்களுக்கு ஒரு சிம்பிள் கேள்வி , நீங்க ரோடுல நடந்து போய்கிட்டு இருக்கீங்க அப்போ உங்களை  ஒரு நாலு பேரு குறுகுறுன்னு கண்ணு கொட்டாம பார்கிறாங்கன்னு வச்சுக்குவோம் அப்போ உங்களால சரியா நடக்க முடியுமா? உடனே கால்கள் பின்ன ஆரம்பிச்சுடாது? சரியா நடக்க முடியாது இல்லையா . அதுலயும் நடக்குறது ஒரு வயசு பையனா இருந்து குறுகுறுன்னு பார்க்குறது நாலு பெண்களா இருந்தா சொல்லவே வேண்டாம் அது வரைக்கும் நல்ல நடந்துகிட்டு இருந்த அந்த பையன் அவங்க பாக்குராங்கன்னு தெரிஞ்சதும் ததக்கா புதக்கான்னு  நடக்க ஆரம்பிசுடுவான். இதே மாதிரி நிலைமைதான் ஒரு பெண் நடக்கும் போது நாலு ஆண்கள் பார்க்கும் போதும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.  இதெல்லாம் மனிதனின் இயல்பு , அடிப்படை உணர்ச்சிகள்.
          ஆனால் இந்த உணர்ச்சிகள் எல்லாம் நமக்கு நம்மையே அறியாமல் மக்கி போக ஆரம்பிச்சு இருக்குகிறது. எப்படின்னு கேட்டிங்கன நாம ரோட்ல நடக்கும் போது , கடைகளில் இருக்கும் போது, ஹாஸ்பிட்டல்களில் இருக்கும் போது, ரயில்வே ஸ்டேஷன் , ஏர்போர்ட் , பஸ் ஸ்டாண்ட், தியேட்டர் , ஷொப்பிங் மால், டிராபிக் சிக்னல் அப்படின்னு இன்னைக்கு கண்காணிப்பு கேமரா இல்லாத இடமே இல்ல .
என்னுடைய கல்லூர் நண்பன் இப்போ லண்டன்ல வேலைல இருக்கான் அவன் சொன்ன ஒரு புள்ளி விவரம் , அவன் ஒரு நாள் காலையில் ஆபீஸ்க்கு போயிட்டு இரவு வீடு திரும்புவதற்குள் அவனை இந்த கண்காணிப்பு கேமராக்கள் குறைந்தபச்சம் இருநூறு முறையாவது புகைப்படம் எடுகின்றனவாம். எதுக்குங்க லண்டன்க்கு எல்லாம் போய்கிட்டு? , இங்க நம்ப ஊருலயே இருக்கே, ஆயிரதெட்டு கண்காணிப்பு கேமராக்கள். தினம் தினம் நம்மை கண்காணித்துகொண்டே இருக்கின்றன . எதற்கு இதெல்லாம்? ஏன் இந்த கண்காணிப்பு ?
      இதற்க்கெல்லாம் பதில் , குற்றங்களை தடுப்பதற்காக , பாதுகாப்பு காரணங்களுக்காக , தீவிரவாத தாக்குதலை தடுப்பதற்காக. இந்த காரணங்கள் எல்லாம் 100% சரியாகவே இருந்தாலும் . என்னுடைய கேள்வி எல்லாம், எங்கே போயிற்று தனிமனித சுதந்திரம்? இன்றைய நிலைமையில் நம்மால் எந்த ஒரு கண்காணிப்பு இல்லாமல் தனிமனித சுதந்திரத்துடன் வெளியே போயிட்டு வர முடியுமா? சும்மா நாலு பேரு நாம நடக்கும் போது வெறிக்க பார்த்தாலே நமக்கு என்னவோ போல இருக்கு, ஆனா கண்காணிப்பு கேமரா என்கிற பெயரால் நம்மை கேமரா கண்கள் எப்போதும் கண்காணித்து கொண்டே இருப்பது எப்படி இருக்கும் ? எதற்காக எந்த குற்றமும் செய்யாத நம்மை கண்காணிக்க வேண்டும்? ஆகா மொத்தத்தில் தனிமனித சுதந்திரம் ( privacy )  பறிபோய்விட்டதாகவே  நான் உணர்கிறேன் . 
         சரி அதற்காக கண்காணிப்பு கேமராவை எல்லாம் நீக்கி விடலாம் , எங்கயும் வைக்க வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை . ஆனால் கண்காணிப்பு கேமரா வைப்பது மட்டுமே குற்றங்கள் தடுத்து விடாது , குறைத்து விடாது . எடுத்துகாட்டாக திருடவோ , கொள்ளை அடிக்கவோ வருபவர்களுக்கு ஒரு எக்ஸ்ட்ரா வேலை செய்ய வேண்டி இருக்கும் அது என்ன என்றால் , அவர்கள் போகின்ற இடத்தில உள்ள கண்காணிப்பு காமெராவை முதலில் செயல் இழக்க செய்ய வேண்டி இருக்கும் அல்லது கேமரா கண்காணிப்பில் சிக்காமல் வேலையை செய்ய வேண்டி இருக்கும் . தீவிரவாதிகளுக்கு இந்த கண்காணிப்பு கேமரா பற்றிய கவலை எல்லாம் கிடையாது . மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் நடந்த போதே நான் நேரடியாக பார்த்தோம் . தீவிரவாதிகளுக்கு அவர்கள் உயிர் மேலயே கவலை இல்ல அப்புறம் எங்க கண்காணிப்பு காமெராவை பற்றி எல்லாம் கவலை பட போகிறார்கள் ? வந்த வேலையை செவ்வனே செய்தது முடிப்பார்கள் .
       சரி இப்போ கண்காணிப்பு கேமராவுக்கே இத்தனை கஷ்டமா இருக்கு என்றால் உங்களுக்கு மற்றும் ஒரு கேள்வி , பெண்கள் வெளி இடங்களுக்கு போகும் போது ஆண்கள் யாரவது தவறான கண்ணோட்டத்தில் பெண்களில் அங்கங்களை அதாவது , பெண்களின் மார்பையோ , பின்புரத்தையோ அல்லது இடுப்பையோ பார்த்தால் அந்த பெண்களின் உள்ளுணர்வு எப்படி இருக்கும்? எதன்னை தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் ?
            சும்மா வெறுமனே வெளி இடங்களில் இந்த மாதிரி பார்வைக்கே எத்தனை தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது , அதுவே அந்த பெண்களில் உடம்பை "நிர்வாணமாய்" யாராவது பார்த்தால் என்னவாகும் ? அதை புகைபடமாகவோ அல்லது வீடியோவாகவோ பதிவு செய்தால் எப்படி இருக்கும் ? அதற்கும் ஒரு படி மேல போய் பதிவு செய்த புகைப்படம் , வீடியோகளை இணையதளத்தில் வெளியிட்டால் என்னவாகும் ?
              இது எல்லாமே நடக்கிறது இன்றைய கலியுகத்தில் . இது எல்லாம் விஞ்ஜான கண்டுபுடிப்புகளின் பக்கவிளைவுகள். இது மட்டும் அல்ல , இன்னும் இளம் தம்பதிகளின் உடலுறவு காட்சிகள் , அந்தரங்கங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகின்றன . எப்படி இதெல்லம் நடக்கிறது? என்ன காரணங்கள் ? நம்மை அறியாமல் எப்படி நம்புடைய அந்தரங்கங்கள் படம் பிடிக்க படிகின்றன ? கூடுமானவரை அதில் இருந்து எப்படி எல்லாம் தப்பிக்கலாம் ? 

எல்லா அதிர்ச்சியான,  நம்ப முடியாத, தகவல்களும்  விவரங்களும் அடுத்த பதிவில் . .



டிஸ்கி : 

இந்த  பதிவு கண்டிப்பாக அனைவரும் படித்து தெரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி எழுதியது அதனால் இதை படிபவர்கள் தயவு செய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும்  கொண்டு செல்லுங்கள் , முக்கியமாக பெண்களிடத்தில் கொண்டு செல்லுங்கள் . நன்றி.
 
அதிர்ச்சிகளுடன், 


ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com



Monday, May 23, 2011 16 comments

உன் விழிகள் பேசும் வார்த்தைகள் புரிந்த எனக்கு ,
உன் இதழ்கள் பேசும் வார்த்தைகள் புரியவில்லை அன்பே ,
தக்காளி.......... இங்கிலீஷ்லையே பேசிக்கொல்லுறாயா . . . .

இன்றைய கால கட்டத்துல நல்ல பிகர் மட்டும் இல்ல , எல்லா பொண்ணுங்களும் இங்கிலீஷ்ல தான் பேசுதுங்க . . .
அதனால இதுல இருந்து என்ன தெரியுதுன்ன ஒரு பிகர் கரெக்ட் பண்ணனும்னா  கூட இங்கிலீஷ் அத்தியாவசியபடுது.
இது ஒரு நகைசுவைக்காக எழுதுனது என்றாலும், இதில் உள்ள வலி என்னவோ உண்மைதான் .
தற்போது இந்தியாவில் அரசு பள்ளிகளின் ஆங்கிலம் கற்பிக்கும் முறையும் , நிலைமையும் , இங்கு கீழே இருக்கும் வீடியோவை பார்த்தால் புரியும் . . .









ஓர் அளவுக்கு இன்ஜினியரிங் காலேஜ்ல என்ன நடக்குது. தமிழ் வழியில் படித்துவிட்டு வந்த மாணவர்களின் நிலைமை என்ன என்பதை ஓர் அளவுக்கு எடுத்து சொல்லி இருக்குது சமீபத்துல விஜய் டி.வீ ல ஒளிபரபாகுற கனா காணும் காலங்கள் ( ஒரு கல்லூரியின் கதை ) இங்கு கீழே இருக்க வீடியோவை பாருங்கள் . .
அதில் அந்த பேராசிரியர் சொல்லுவது அத்தனையும் உண்மை . இன்ன்றைய கால கட்டத்துல உயர் கல்வி பெரும்பாலும் ஆங்கிலதிலையே இருபதினால் ஆங்கிலம் அறிவு எனபது அவசியம் ஆகிறது .









இந்த ஆங்கில மொழி பிரச்னை எனபது தமிழ் வழி கல்வி கற்றவகளுக்கு மட்டும் அல்ல , மலையாள வழி கல்வி , தெலுங்கு வழி கல்வி என்று அவர் அவர் மாநில மொழிகளில் படித்த அனைவருக்கும் இருக்கிற பிரச்சனைதான். 
சரி இதுக்கு எல்லாம் என்னதான் தீர்வு? 
முதல்ல உலகத்துல இருக்க எல்லாரையும் தமிழ் படிக்க வைக்கலாம் , அமெரிக்க அதிபர் முதல் ஆப்பரிக்க அண்ணாச்சி வரை எல்லாரும் தமிழ் தான் .அப்புறம் உயர் கல்வி அனைத்தையும் தமிழ்வழி(Tamil Medium ) கல்வியா மாத்திடலாம். அப்போ இனிமே  உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் எல்லாரும் தமிழில் தான் பேச வேண்டும் , உலகத்தில் உள்ள எல்ல பல்கலைக்கழகங்களும் , கல்லூரிகளிலும் எல்ல பாடமும் தமிழில் கற்பிக்க வேண்டும்  . உலகத்தில் உள்ள எல்ல புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் கம்ப்யூட்டர் முதல் இன்டர்நெட் வரை அனைத்தும் தமிழில் . முக்கியமான ஒன்று எல்லா பிகர்சும் இனிமே தமிழில் தான் கதைக்க வேண்டும் .

எப்புடிஈஈஈ  ? ? ? 

இப்படி ஓவர் நைட் ல எல்லாம் மாறிடுச்சுனா , நம்ப தமிழ் வழி கல்வியில் படிச்சுட்டு வர்ற மாணவர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது .  
கொய்யால இதெல்லாம் நடக்குற காரியமா ?
நமது அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக மேடையில் செந்தமிழில் உணர்ச்சி பொங்க  பேசிவிட்டு தங்கள் வீட்டு பிள்ளைகளை மட்டும் விவராமாக ஆங்கில வழி , மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிக்க வைத்து பின்னாளில் பன்னாட்டு வணிகமும் , தொழிலும் செய்யும் திறமைசாலிகளாக மாற்றட்டும் , நம் அப்பாவி மக்கள் மட்டும் தமிழ் வழி கல்வி கற்று நொந்தது நூலாகட்டும் . 
நகைசுவைக்கு எல்லாம் அப்பாற்பட்டு நான் என்ன சொல்ல வரேன் என்றால் .
அரசாங்கமும் வழக்கமான கல்வி முறைய மாற்ற வேண்டும் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை கொண்டு வர வேண்டும் ,
தமிழகத்தில் எல்லாருக்கும் ஆங்கில அறிவு முறையாக வரவேண்டும் , எல்லா பாடங்களையும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்
அதுக்காக யாரையும் தமிழ் படிக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை , மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் , தமிழனாய் பிறந்த அனைவரும் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும். ஒவ்வொரு தமிழனும் முறையாக தமிழை கற்றால் தமிழ் தானாக வளரும் , தமிழ் அழிந்து விடும் என்ற அச்சம் கொஞ்சம் கூட வேண்டாம் . 
அன்றே திரைகடல் ஓடி திரவியம் தேடிய தமிழன் . பல நாடுகளில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்கிய அதிசியங்களும் உண்டு  . உதாரணத்துக்கு சிங்கபூரில் தமிழ் மொழி ஒரு ஆட்சி மொழி .
தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்தும் பெற்றாகி விட்டது .
தமிழ் என்றும் அழியாது , அதை தமிழன் அழியவும் விட மாட்டன் .
அதனால் குழந்தைகளை ஆங்கிலம் படிக்க வையுங்க , ஆங்கில வழியில் படிக்க வையுங்கள் . வேண்டுமென்றால் ஒரு தமிழ் பாடம் மட்டும் அல்லாது மேலும் ஒரு தமிழ் பாடத்தை அதிகமாக பாடத்திட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள். மற்ற எல்லாத்தியும் ஆங்கிலத்தில் படிக்க வையுங்கள் . 
ஆங்கிலம் மட்டும் அல்ல , நமது தேசிய மொழியான ஹிந்தியையும் படிக்க வையுங்கள் . இந்தியன் , இந்தியன் என்று மார் தட்டி கொள்ளும் நமக்கு எத்தனை பேருக்கு ஹிந்தி சரளமாக பேசவும் , எழுதவும் தெரியும்?
ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக அதிகமா தேவைப்படும் மொழி ஹிந்தி , இந்தியன் ஆகிய நாம் ஹிந்தி கற்று கொள்வது ஒன்றும் கொலை குற்றம் அல்ல .
நான் ஹிந்தி கற்று கொள்ளாமல் போய் விட்டேனே என்று இன்று வரை வருத்தபடுகிறேன் . 
இங்கு அரபு நாட்டில் , அவசரத்துக்கு டாக்ஸி பிடித்தேன் அது ஒரு பாகிஸ்தானி டிரைவர் . ஓர் இடத்துக்கு போக எனக்கு தெரிஞ்ச தாதாக்க புதக்க ஹிந்தில நான் சொல்லி எவ்வளவு என்று கேட்ட அவன் “ பந்த்ரா  ரியால் என்கிறான் , நான் சொல்கிறேன் “ நஹி நஹி , பச்சீஸ் ரியால் என்று , அவன் “முஷ்கில் நஹி பாய் , பந்த்ரா ரியால் பஸ்  அப்படிகிறான் . நான் முடியவே முடியாது என்கிறேன் . என்ன கொடுமை அந்த டிரைவர் தலைல அடிச்சுகிட்டு ஏற சொன்னான் .
அதன் தமிழ் அர்த்தம இதுதான் . அவன் 15  ரியாலுக்கு போலாம் என்கிறான் , நான் இல்ல இல்ல , 25 ரியால் என்றால்தான் வருவேன் என்கிறேன் . என்ன ஒரு அதிபுத்திசாளிதனம் , என்ன கொடுமை இதெல்லாம்? நமக்கு தெரிந்த ஹிந்தி அவ்வுளவுதான் .  
அந்த பாகிஸ்தானி டிரைவர் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி , 
“ இந்தியன் உனக்கு உன் நாட்டின் தேசிய மொழி ஹிந்தி தெரியாதா? “  
நாக்கை புடிங்கிகிலாம் போல் இருந்தது . . .
நான் தமிழன் , ஹிந்தி எதிர்ப்பு , அதெல்லாம் உள்ளூர் அரசியல் ஆனால் மத்த நாட்டுக்காரனுக்கு நான் ஒரு இந்தியன் எனக்கு ஹிந்தி தெரியவில்லை . எவ்வளவு பெரிய அவமானம்?
நிறைய மொழிகளை நாம் படிபதினால் நாம் ஒன்றும் தாழ்ந்து போய் விட போவதில்லை 

“ கண்டதை தின்பவன் குண்டன் ஆவான் “

என்று ஒரு பழமொழி கேள்வி பட்டு இருப்பீர்கள் . ஆனால் அதன் சரியான பழமொழி ஏன் தமிழ் ஆசிரியர் சொல்லி இருக்கிறார் .

“ கண்டதை படிப்பவன் பண்டிதன் ஆவான் “ 

சாபிடுரதுலையே எப்பவும் நமது சிந்தனை இருக்கு அதனால்தான் பழமொழி கூட அப்படி மருவி விட்டது .
அதனால் சின்ன குழந்தையிலையே முடிந்த வரை எல்லாத்தியும் படிக்க வையுங்கள் ,
குழந்தை மனதும் , மூளையும் எந்த கவலையும் இல்லாமல் அதிக புத்துணர்ச்சியோடு காலியாக இருக்கும் அதில் அப்பவே நல்ல விஷியங்களையும் , மொழிகளையும் நிரபினால்தான் உண்டு , இல்லையென்றால் வளர்ந்த பின் எதையும் புதிதாக நிரப்ப முடியாது .
பசுமரத்தில்  ஆணி நன்றாக பதியும் . .

ஆதங்கங்களுடன் , 

ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com



Monday, May 16, 2011 7 comments



தமிழ் வழி கல்வி அவசியமா ? (பாகம் -1) படிக்க இங்கே சொடுக்கவும் 

 Note : இந்த பதிவு நீளமா  இருக்குன்னு படிக்காம போயடாதிங்க . கொஞ்சம் நீளம்தான் தவிர , கண்டிப்பா சுவாரசியம் குறையாம எழுதி இருக்கேன் . இந்த கருத்துகளும் ரொம்ப அவசியம் ஆதலாம் முடிந்தவரை படித்து முடிங்க . . 

     இப்படி என்ன நண்பன் செய்த கலாட்டாக்கள் இல்லாம , என்னுடைய இன்ஜினியரிங் வகுப்பு தோழர்கள் சிலருக்கும் ஆங்கிலம் நிறையவே தடுமாற்றம் . 
             தோழன் ஒருவன் இப்படிதான் வகுப்பில் அடுத்த வரிசையில் இருந்த ஆந்திர மாணவனை பார்த்து “ you call me? “  ,  “you call me? “ அப்படின்னு கேட்டுகிட்டே இருந்தான் .அந்த ஆந்திர மாணவனுக்கு ஒண்ணுமே புரியல what? What? அப்படின்னு கேட்டுட்டு விட்டுட்டான். இதை கவனிசுகிட்டு இருந்த   நான்  “என்னடா இப்போ எதுக்கு அவன உன்னை கூப்பிட சொல்லுரேன்னு கேட்டா  , அதுகுக்கு அவன் சொல்லுறான் , “ நான் எங்கட அவன கூப்பிட சொன்னேன்? அவன்தான்  என்னை கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு அதான் அவன்கிட்ட என்னை கூப்பிடியான்னு கேட்டேன்னு “ சொன்னான் .“டேய் அதுக்கு அப்படியாட கேப்பாங்க ? “Did you Call me? “ அப்படின்னு கேக்கணும் ன்னு சொன்னேன் . “ஓ அப்படியா ?“ அப்படினான் .
        இதே மாதிரி  கம்ப்யூட்டர் லேப்ல இருந்து முடிச்சுட்டு போறதுக்கு மேடம் கிட்ட போய் “ Madam  , I Finish , I go Madam “ அப்படின்கிறான் . அதாவது நான் முடிச்சுட்டேன் மேடம் , நான் போகலாமன்னு அனுமதி கேட்க்கதான் அப்படி கேட்டுயிருக்கான் . இத கேட்ட மேடம் என்னடா இவன் கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம நான் போறேன்னு சொல்லுரான்னு காண்டாகுது .“ I have Finished madam , Shall I go ? “  அப்படின்னு கூட கேட்க்க தெரியல .

          இன்னொரு நண்பனுக்கு  சொன்ன நம்ப மாட்டிங்க , அவனுக்கு ஆங்கிலத்துல “ WHO , WHAT , WHERE , WHOM , WHEN , HOW , “ இதுக்கு எல்லாம் சரியான அர்த்தமும் தெரியாது , வித்தியாசமும் தெரியாது . அதுவும் இன்ஜினியரிங் படிக்கிற போது . அப்புறம் எப்படிடா பரீட்சைல கேள்விக்கு பதில் எழுதுறே? ன்னு கேட்ட , எல்லாம் ஒரு குத்து மதிப்பாதான்ன்னு சொல்லுறான் . அதாவது அந்த “WHO  , WHAT , WHERE”  க்கு அப்புறம் வர்ற வாக்கியங்கள வச்சு ஓர் அளவுக்கு புரிஞ்சும் புரியாமையும் பதில் எழுதுறது .
         இது எல்லாம் கேக்குறதுக்கு மொக்கையாகவும் , சிலது காமெடி ஆகவும் இருக்கலாம் , ஆனால் இதுக்குள்ள இருக்க நுணுக்கமான விஷியம் என்னன்னு புரிஞ்சுக்கணும் .இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் , இவங்க எல்லாரும் தமிழ் வழி கல்வி (Tamil Medium) ல , ஒண்ணாவதுல இருந்து பன்னிரெண்டாவது வரைக்கும் படிச்சுட்டு வந்தவங்க . குறைஞ்சது பாதிக்கு மேலயாவது தமிழ் வழி கல்வில படிச்சு இருப்பாங்க .இது ஒண்ணும் சாதாரணம எடுத்துக்க கூடிய விஷியம் கிடையாது . ஒருவன் தனது அடிப்படை கல்வியையே தமிழ் மொழில படிச்சுட்டு , திடீர்னு ஒரு நாள் இன்ஜினியரிங் வந்து சேர்ந்துவிட்ட உடனே அவன் இன்ஜினியரிங் படிச்சு பாஸ் பண்ணிவிட முடியாது . என்னென்றால் அவன் சின்ன வயசுல இருந்து படித்த அடிப்படை பாடங்கள் அனைத்துமே தமிழில் .உதாரணத்துக்கு , தமிழ் வழி கல்வியில் படிக்கும் ஒரு மாணவன் , கணிதம் , இயற்பியல் , வேதியியல் அனைத்தும் தமிழில் இருக்கும் , எப்படி? இப்போ கணிதத்தில் , கூட்டல் , கழித்தல் , பெருக்கல் , வகுத்தல் , சமன்பாடு , அப்படின்னு
இயற்பியல் எப்படி ? மூன்றாம் விதி , இயக்கம் , அப்படின்னு ,
வேதியியலில் எப்படி ?  மூலக்கூறு , குடுவை , அப்படின்னு
ஆனா இதே ஆங்கில வழியில் படிக்கும் போது  எப்படி இருக்கும்? Addition , subtraction , multiplication , division , equation , third law , friction ,  precipitation ,  conjunction , conditions , describe , solid , dilute, vapor, organic , inorganic , atom , neutron   etc . .    
இப்படிதான்  இன்ஜினியரிங்ளையும் இருக்கும். கொய்யால இதெல்லாம் சும்மா ஒரு உதாரணம் தான் , ஆனா அங்க போய் பார்த்தாதான் தெரியும் இது போல ஒண்ணு,  ரெண்டு வார்த்தைகள் இல்ல , ஆயிரகணக்கான வார்த்தைகள் எல்லாம் புதுசா கொட்டி கிடக்கும்.இது இன்ஜினியரிங்ல மட்டும் இல்ல , மருத்துவம் , அறிவியல் படிப்புகளிலும் அப்படிதான் .
தமிழ் வழியில் zoology படித்த ஒருவன் , படிச்சதெல்லாம் , நுண்ணுயிர் , நாளங்கள் , நூறயீரல், நரம்பு , ரத்தம் , அப்படின்னு தான் படிச்சு இருப்பான்
ஆனா மருத்துவம் படிக்க போன அங்க எல்லாம் ஆங்கிலத்துல இருக்கும் . lunges , vein , nerves , digestive system , micro, syndrome, etc . இப்படி . 

         இதெல்லாம் முழுக்க முழுக்க தமிழ் வழி கல்வியில் படிச்சுட்டு வந்த ஒருத்தனுக்கு எப்படி புரியும்? ஒரு ஈர  வெங்கையமும் புரியாது.
கண்ணை கட்டி காட்டுல வுட்ட மாதிரி இல்ல ,
கண்ணையும் கட்டி , கால்ல ரெண்டு கல்லையும் கட்டி , கடல்ல  தள்ளி வுட்ட மாதிரி இருக்கும் .

    ஒரு மண்ணும் புரியாது , மந்திரிச்சு வுட்ட கோழி மாதிரியே இருப்பாங்க . முதல்ல ஆங்கில  வார்த்தைகள் என்னனு தெரிஞ்சுக்கணும் , அப்புறம் அந்த வார்தைக்களுக்கு என்ன அர்த்தம்ன்னு புரியன்னும் , அப்புறமா பாடத்த படிக்கணும் , விடிஞ்சுடும்  . . . அதுக்குள்ள நாலு வருசாம் இல்ல , எட்டு வருஷம் ஆகிடும் . . .   அதுக்குள்ளே அவங்க படுற கஷ்டம், மன உளைச்சல் , அவமானங்கள் இருக்கே, பாவம் வெளியவும் சொல்ல முடியாம , உளவியல் ரீதிய ரொம்ப கஷ்ட்ட படுவாங்க .
        எனக்கு  இவ்வளவு எப்படி தெரியும்ன்னா , நான் 1997 ஆம் ஆண்டு இன்ஜினியரிங் சேர்ந்தேன் அப்போது என்னோட வகுப்பில் தமிழ் வழி (Tamil Medium ) ல படிச்சுட்டு வந்தவங்க மொத்தம் 22  பேர் . அவங்க படுற கஷ்டம் எல்லாம் கண்ணு முன்னாடி பார்த்து இருக்கேன் , சில பேர் படிப்ப தொடர  முடியால் பாதிலையே விட்டுகூட போய் இருக்காங்க .ஏனென்றால்  , படிக்க முடியல , நிறைய பாடங்களில் பெயில் , அதிக படியான அரியர்ஸ் . ஒரு செமஸ்டர்ல பெயில் ஆனா அடுத்த செமஸ்டர் வந்துடும் அந்த பாடங்களையும் படிக்கணும் . பெயில் ஆனா பாடங்களையும் படிக்கணும் , ஒன்னும் முடியாது . சதுரங்கதுல பாம்பு போல தூரத்தும் . .  . தலைக்கு மேல வெள்ளம் ,  ஜான் போன என்ன ? முலம் போனா என்னக்கிற கணக்குதான் .
          எனக்கு தெரிஞ்ச ஒரு நண்பன் எல்லாம் இன்ஜினியரிங் கடைசி வருசத்துல விட்டுட்டு போய்ட்டான் , அவனால முடியல ஏக பட்ட அரியர்ஸ் . பார்க்கவே பாவமா இருந்தது . எத்தன மன உளைச்சல் , அவமானம் , நாலு வருஷம் கால விரையம் , பணம் விரையம் . எதிர்காலமே கேள்வி குறி ஆகிடுது .
    
           இதுக்கெல்லாம் அதிமேதாவிகள் சாதாரணம சொல்லிடுவாங்க , முயற்சி செயாதால் முடியாதது இல்ல , முயற்சி திருவினை ஆக்கும் ,
முயற்சி செய்து படித்து இருந்தால் படித்து இருக்கலாம்ன்னு .
ஒழுங்கா படிக்கணும் , சும்மா சினிமா , ஆட்டம் பாட்டம்ன்னு , ஊரை சுற்றி விட்டு படிக்காம போய் இருப்பன்ன்னு அதான் பெயில் ஆகி இருப்பான்ன்னு  சொல்லுற அதிமேதாவிங்க எல்லாம் அப்படியே ஷேர் ஆட்டோ புடிச்சு , இல்ல அடுத்த ட்ரெயின் புடிச்சு வாங்க உங்க எல்லாரையும் சைனிஸ் மொழி இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்த்து விடுறேன் , எங்கே சினிமா , ஆட்டம், பாட்டம் , ஊரை சுத்தாம , நாலு வருசத்துல நல்ல  முயற்சி செய்தது படிச்சு பாஸ் பண்ணி காட்டுங்க பார்க்கலாம் . கொய்யால வந்துராதிங்க இந்த பக்கம் சொம்ப தூக்கிகிட்டு  . . . கொண்டேய்புடுவேன்.

தொடரும் . . .

வருத்தம் மற்றும் கோவங்களுடன்,

ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com
|



Monday, May 2, 2011 26 comments


     
        தமிழ் நமது தாய் மொழி . . . இனிமையான மொழிகளில் தமிழ் முதல் இடத்தை பிடிக்கிறது நம்மை பொருத்தவரை . நமது கல்வி முறையில் தமிழின் பங்கு என்ன? நாம் அனைவரும் தமிழை முறையாக கற்கிறோம? தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் முறையான தமிழை கண்டிப்பாக கற்க வேண்டிய கடமை  உள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்று . தமிழை ஒரு தமிழன் கற்க வில்லை என்றால் வேறு யாரு கற்பார்கள்? பிறகு எப்படி மொழி வளரும்? தமிழை முறையாக கற்க வில்லையென்றால் பிறகு எப்படி தமிழை முறையாக பேசுவது ? எப்படி தமிழை வாசிப்பது? எப்படி எழுதுவது ? அதனால் தமிழனாய் பிறந்த எவரும் குறைந்தது தொடக்க கல்வியில் இருந்து , 12 ஆம் வகுப்பு வரையும் கண்டிப்பாக தமிழை ஒரு பாடமாக கற்க வேண்டும் , தமிழ் மொழில் உள்ள பொக்கிஷங்களான திருக்குறள் , ஆத்திசூடி , புறநானூறு , அகநானூறு , சிலப்பதிகாரம் , செய்யுள்கள் , இன்னும் பலவற்றை  படித்தால்தான் வாழ்கை நெறிமுறைகளை கொஞ்சமாவது கற்றுகொள்ள முடியும் . 
        நான் 12 ஆம் வகுப்புவரை தெரிந்தோ தெரியாமலோ தமிழை ஒரு பாடமாகவும் , மற்றதை பாடங்களை ஆங்கில வழி முறையிலும்  படிததினால்தான் என்னால் தமிழ் பேச முடிகிறது , படிக்க முடிகிறது , எழுத முடிகிறது என்பதை விட , என்னால் வாழ்கையில் முடிந்த வரை ஒழுக்கங்களையும் ,வாழ்க்கை நெறி முறைகளுடன் , அஞ்சுவதற்கு ( தவறு செய்வதற்கு )  அஞ்சி , எனக்கு வரும் அநியாயங்களுக்கு நெஞ்சு நிமிர்த்தி வீரமுடன் எதிர் கொண்டு வெற்றி பெற,  தமிழும் , தமிழ் பாடங்களும் , தமிழ் இலக்கியங்கலுதான்  கற்று கொடுத்தன என்று சொன்னால் அது மிகை ஆகாது . . .  

ஆனால் . . . . 
நிற்க.

       நான் இரண்டாம் ஆண்டு பொறியியல் கல்லூரி படிக்கும் போது . .  ஒரு இனிய சனிக்கிழமை வார  விடுமுறை அன்று என் நண்பன் கல்லூரி விடுதியில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள கோவைக்கு சென்று, நாள் முழுவதும் சினிமா , ஹோட்டல்ன்னு தன்னுடைய ஒரு வார  விடுதி என்னும் சிறை வாழ்கையை  புதுபித்து கொள்ள வந்த பெயில் நாள்தான் அந்த  சனிகிழமை. தன்னுடைய நோக்கங்கள் அனைத்தையும் வெற்றியுடன் முடித்துவிட்டு , மாலை வெற்றி களிப்புடன் பேருந்து ஏற பேருந்து நிலையத்துக்கு வந்து, வாழ்கையில் முன்னுக்கு வரும் அதே உத்வேகத்தோடு இருந்த அதனை கூட்டத்தையும் பின்னுக்கு தள்ளி (ஏனென்றால் அத்தனை  கூட்டம் அம்மும்,  இரண்டு அல்லது மூன்று மணிக்கொரு பேருந்துதான் கல்லூரிக்கு ),  முன்னேறி தன்னுடைய திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தி ஜன்னல் ஓர இருக்கை பிடித்து அமர்ந்து விட்டு , தன்னை ஆசுவாச படுத்திவிட்டு பார்த்தால் , பக்கத்தில் இருக்கையில் இவனோடு எங்கள் வகுப்புக்கு பாடம் எடுக்க வரும் எங்கள் துறை பேராசிரியர். இவனுக்கு ஆச்சரியம் + சந்தோசம் . 

   அவரை பார்த்து நண்பன் வணங்க , பதிலுக்கு அவர் “ என்னப்பா இந்த பக்கம் ? எதுவும் முக்கியமான வேலையையாய் வந்தியா? “ அப்படின்னு இவர் கேட்டு இருக்காரு, இவன் மதியம்  அஜ்மீர் பிரியாணி கடைல செஞ்ச பிரியாணி எல்லாம் தீர்ந்தது போக,  குஷ்க்கா வரைக்கும் விட்டு குடுக்காம முக்கு முக்குன்னு  முக்கிய அந்த முக்கியாமான விஷியத்தையா  சொல்ல முடியும்?  “ இல்ல சார் , மாமா வீட்டுக்கு அவசர வேலையா  போயிட்டு இப்பதான் வரேன் அப்படினான் அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு. 
இப்போ இவன் பங்குக்கு பேராசிரியர் கிட்ட “ நீங்க எங்க சார் இந்த பக்கம் ன்னு கேட்க்க . 
பேராசிரியர்  “ நான் யுனிவர்சிட்டில எக்ஸாம் பேப்பர் திருத்த போய் இருந்தேன்பா “ என்றார்  . 
நண்பனுக்கோ ஆர்வம் தாங்க முடியல , ஒரு வேலை நாம எழுதுன பரீட்சை பேப்பர் தான் திருத்தி இருபாரோன்னு ஒரு ஆர்வத்துல, “ எந்த சுப்ஜெச்ட் (subject) பேப்பர் சார் திருதுனிங்க?” என்றான் . 
அதற்க்கு அவர் “ அது  confidential    தம்பி “ ன்னு சொல்லி இருக்காரு . அதற்க்கு நம்ப நண்பர் இன்னும் ஆர்வத்தோட “ அது எந்த செமஸ்டர் பேப்பர் சார் “ அப்படின்னு கேட்டான் பாருங்க , பேராசிரியர் முகம் போன போக்க பாக்கணுமே . மனுஷன் அதுக்கு அப்புறம் பேசணுமே .
        நம்ப பையன் அதே ஆர்வத்தோட விடுதிக்கு வந்து சேர்ந்ததுக்கு அப்புறம் நேரா நாங்க குழுமி இருந்த  அறைக்கு வந்து “ மச்சான் , மச்சான் , நான் நம்ப சார்ர பேருந்துல பார்தேன்டா , நம்ப யுனிவர்சிட்டில பரீட்சை பேப்பர் திருத்திட்டு திரும்ப என்கூடதான் பேருந்துல வரும் போது பார்தேன்டா , என்ன சுப்ஜெச்ட் பேப்பர் சார் திருத்துனிங்கன்னு  கேட்டேன் , அதுக்கு அவரு , அது confidential ன்னு சொன்னாருடா . ஆமா அது எந்த செமஸ்டர் பேப்பர்  மச்சி “ ன்னு கேட்டான் பாருங்க எங்களுக்கு வந்தது பாருங்க சிரிப்பு , எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சோம் .
அப்புறம்தான் நாங்க அதோட அர்த்தம என்னன்னு , “confidential  அப்படின்னா சொல்ல கூடாத விஷியம் , ரகசியம் அப்படின்னு அர்த்தம டான்னு சொன்னோம் . அதுக்கு அவன் “ ஓ அப்படியா ? அதான் சார் அதுக்கு அப்புறம் சார் என் பக்கம் திரும்பவே இல்லையா?  இறங்குரவரைக்கும்? “ அப்படினான் . பாவம் அந்த சார் ,  இவன்தான் அவர கலாய்கிரான்னு நினைச்சு டென்ஷன் ஆகிட்டாரு போல .

     இது போலதான் இன்னொரு முறை இதே நண்பன் மினி ப்ராஜெக்ட் விஷயமாக கோவையில் இருந்து சென்னை போக வேண்டி ,  ரயில் டிக்கெட் புக் செய்த கலாட்டா . .  

        மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கும் போது அதே நண்பன் மினி ப்ராஜெக்ட் செய்ய வேண்டி ஒரு சென்னை கம்பெனி க்கு சொல்ல வேண்டி நேர்ந்ததால் , தலைவர் புகைவண்டி முன் பதிவு செய்ய கோவை புகைவண்டி நிலையத்திற்கு சென்று முன்பதிவு செய்து வந்தார் ,
வந்ததோடு இல்லாமல் விடுதியில் எங்களிடம் தம்ப்பட்டம் அடிக்க ஆரம்பித்து விட்டான் (வடிவேலு நானும் ஜெயில் க்கு போறேன் , நானும் ஜெயில் க்கு போறேன்கிற கணக்கா ) நான் மெட்ராஸ் போறேன் , நான் மெட்ராஸ் போறேன் , அதுவும் ட்ரெயின் டிக்கெட் ரிசர்வ் செஞ்சு போறேன்னு.. தாங்க முடியல , என்னாடா , என்ன விஷியம் னா ? ரிசர்வ் பண்ண டிக்கெட்டை முகத்துக்கு முன்னாடி ஆட்டி காமிச்சு , ஐயா மெட்ராஸ் போறோம் இல்ல ன்னு எருமை வயசுல பெருமை வேற . கொண்டாட டிக்கெட்டை வாங்கி பார்த்த , கோவையில் இருந்து வெள்ளிகிழமை இரவு சென்னை போகிற சேரன் எக்ஸ்பிரஸ் புக் பண்ணுறதுக்கு பதிலா , அதே வெள்ளி இரவு சென்னையில் இருந்து கோவை வர இருந்த சேரன் எக்ஸ்பிரஸ் ட்ரெயின்னை புக் பண்ணிட்டு வந்துட்டு இவ்வளவு ஆர்பாட்டம் .
தப்பு எங்க நடந்ததுன்ன , முன் பதிவு சீட்டுல , என்னதான் தமிழ் இருந்தாலும் , இங்கிலீஷ் இருக்க முன் பதிவு சீட்ட எடுத்து தலைவர் ஸ்டைலா பூர்த்தி செஞ்சு குடுத்து இருக்காரு , அதுல from போடுற இடத்துல To வ்வும் , To  போட வேண்டிய இடத்துல  From ம்மும் போட்டுட்டாரு .
 From : Coimbatore  , To : Chennai  இப்படி போடுறதுக்கு பதில்  From : Chennai , To : Coimbatore  அப்படின்னு போட்டுட்டாரு .  டிக்கெட் பதிவு செய்கின்றவரும் , இவர் ட்ரெயின் நம்பர்தான் தப்ப போட்டுடாருன்னு அதை திருத்தி டிக்கெட் புக் பண்ணி குடுத்துடாறு . அடுத்த நாள் அடிச்சு புடிச்சு காலையே ஓடி போய் அந்த டிக்கெட்டை ரத்து செய்துட்டு , வேற டிக்கெட் புக் பண்ணிட்டு வந்தது தனி கதை .
     அடுத்த பதிவில் , நான் இங்கு அரபு நாட்டில் பாகிஸ்தானி டாக்ஸி டிரைவரரோடு ஹிந்தியில் டாக்ஸி வாடகைக்கு நடந்த வாக்குவாதம்மும் , நான் வாங்கிய பல்பும் . . . .
அடுத்த பதிவில் . . . .

தொடரும் . . .
தமிழனாய் பெருமையுடன் , 

ராஜேஷ் . . .
 

Saturday, November 20, 2010 18 comments




Note : 
சாதி = எய்ட்ஸ்  (part-1) படிக்காதவர்கள் , முதலில் அதை படித்துவிட்டு     ( part -2 ) தொடரவும் . சாதி = எய்ட்ஸ்  (part-1) படிக்க இங்கே சொடுக்கவும் (click on)
http://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html

        சரி இப்போ எதுக்கு  இவ்வளவு கோவம்? இப்போ இந்த 21 வது நூற்றாண்டுல அப்படி என்ன சாதி கலவரம் நடக்குது ? எதுக்கு இந்த பதிவு ன்னு கேக்குறிங்களா?
அவங்களுக்க்காகதான்  இந்த தலைப்பும் , அந்த தலைப்புக்கான விளக்கமும். 

காட்சி - 1
          ஒரு மெத்த படித்த குடும்பம் , பெற்றோர்கள் நல்ல உயர்ந்த பணியில் இருப்பவர்கள் . அவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் .  மகனுக்கு ஒரு உயிர் நண்பன் . சிறு வயதில் இருந்தே அவர்கள் வீட்டுக்கு வந்து போகிறவன் .நண்பனுக்கு எதிர் பாராத விதமாக ஒரு விபத்து ஏற்பட்டு,  சிகிச்சை அளிக்கும் போது தவறுதலாக HIV எய்ட்ஸ் பரவி விடுகிறது . இதை அறியும் அந்த குடும்பத்தினர் , நன்கு படித்தவராகைனாலும் , மருத்துவத்தில் விழிப்புணர்வு கொண்டவராகைனாலும் , HIV எய்ட்ஸ் பற்றி தெரிந்ததனால் . அந்த மகனின் நண்பனிடத்தில் எந்த வித ஒதுக்குதல் இல்லாமல் சகஜமாகவும் , அக்கறையுடனும்  பழகுகிறார்கள்.  மகனின் நண்பன் வழக்கம் போல் வீட்டுக்கு வருகிறான் , அவர்களோட பழகுகிறான் , தொடுகிறான் , விளையாடுகிறான் , ஒன்றாக உட்கார்ந்து  உணவு கொள்கிறார்கள் , ஒரே தட்டில் உணவு உட்கொள்கிறார்கள் . இது போல் வாழ் நாள் முழுவதும் இருக்க அந்த குடும்பத்தினருக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை . ஏனென்றால் இதன் மூலம் HIV எய்ட்ஸ் பரவாது . அது அவர்களுக்கு தெரியும் . ஆனால் அந்த நண்பன் அந்த வீட்டு பெண்ணின் மேல் காதல் கொள்கிறான் , அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அந்த குடும்பத்திடம் போய் , நான் உங்க பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் அப்படின்னு பொண்ணு கேட்டா , அங்க என்ன நடக்கும்? பெரிய பூகம்பமே வெடிக்கும் . " ஏன்டா நாய்யே போன போகுதுன்னு மனிதாபிமானத்தோட இரக்க பட்டு வீட்டுக்குள்ள சேர்த்தா , சாப்பாடு போட்ட , நீ உண்ட வீட்டுக்கே பாதகம் நினைக்கிறியா ? நன்றிகெட்ட நாயே " . அப்படின்பாங்க .  இல்ல தெரியாமதான் கேக்குறேன் எந்த பெற்றோர்கள் சார் ஒத்துக்குவாங்க? ஒரு HIV எய்ட்ஸ் உள்ள ஒருவனுக்கு தங்களோட பெண்ணை கல்யாணம் பண்ணி குடுக்க?

அந்த மாதிரிதான் சார் இப்போ சாதிய நினைக்குறாங்க . என்ன ஒரு வேதனையான விஷயம் .

இப்போ இங்க எய்ட்ஸ் இருக்க இடத்தில எல்லாம் , வேற சாதியோ இல்ல , கீழ் சாதியோ போட்டுகங்க .

காட்சி - 2
                 ஒரு  குடும்பம் . நல்ல பெற்றோர்கள் .அவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் .  மகனுக்கு ஒரு உயிர் நண்பன் . சிறு வயதில் இருந்தே அவர்கள் வீட்டுக்கு வந்து போகிறவன் . ஆனால்  நண்பன் அவர்கள் சாதி கிடையாது . வேறு சாதியோ , இல்லை கீழ் சாதியையோ சேர்ந்தவன் . இதை அறியும் அந்த குடும்பத்தினர் , அந்த மகனின் நண்பனிடத்தில் எந்த வித ஒதுக்குதல் இல்லாமல் சகஜமாகவும் , அக்கறையுடனும்  பழகுகிறார்கள்.  மகனின் நண்பன் வழக்கம் போல் வீட்டுக்கு வருகிறான் , அவர்களோட பழகுகிறான் , தொடுகிறான் , விளையாடுகிறான் , ஒன்றாக உட்கார்ந்து  உணவு கொள்கிறார்கள் , ஒரே தட்டில் உணவு உட்கொள்கிறார்கள் . இது போல் வாழ் நாள் முழுவதும் இருக்க அந்த குடும்பத்தினருக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை . ஏனென்றால் இதன் மூலம் HIV எய்ட்ஸ்  சாதி பரவாது . அது அவர்களுக்கு தெரியும்  ஆனால் அந்த நண்பன் அந்த வீட்டு பெண்ணின் மேல் காதல் கொள்கிறான் , அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அந்த குடும்பத்திடம் போய் , நான் உங்க பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் அப்படின்னு பொண்ணு கேட்டா , அங்க என்ன நடக்கும்? பெரிய பூகம்பமே வெடிக்கும் . " ஏன்டா நாய்யே போன போகுதுன்னு மனிதாபிமானத்தோட இரக்க பட்டு வீட்டுக்குள்ள சேர்த்தா , சாப்பாடு போட்டா , நீ உண்ட வீட்டுக்கே பாதகம் நினைக்கிறியா ? நன்றிகெட்ட நாயே " . அப்படின்னு அன்போட கொஞ்சுவாங்க . இல்லை நல்ல படித்த அப்பாவாக இருந்தால் " இல்ல தம்பி எங்க வீடு பெண்ணை வேற இடத்துல முடிவு பண்ணிட்டோம்  . உங்களுக்கு கல்யாணம் பண்ணி குடுக்க எங்களுக்கு விருப்பம் இல்லை" அப்படின்னு ரீஜெண்ட சொல்லிடுவாங்க .

                இதுதான் சார்  இன்றைய நிலைமை.  நீ என்ன சாதியா வேண்டுமானாலும் இருந்துக்கோ , வேற சாதியோ , கீழ் சாதியோ, மேல் சாதியோ . பிரச்னை இல்லை . வீட்டுக்கு வா போ  , சாப்பிடு , தங்கு , வீட்டு  விஷசங்களில் கலந்துக்கோ . ஒரு கவலையும் இல்லை . வீட்டுல கல்யாணம்ன்ன பாசத்தோட கூப்பிடுவாங்க , " தம்பி இது நம்ப வீட்டு கல்யாணம் , மத்தவங்க மாதிரி கல்யாணத்தன்னைக்கு வந்தோமா , gift  குடுத்தோம , சாப்பிட்டோம போனமனு இருந்த உன்ன கொன்னுடுவேன் , கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலையே வந்து இருந்து நீதான் கல்யாண வேலையெல்லாம் பாக்கணும் . அப்படின்பாங்க . அதே மாதிரி நம்ப  வீட்டு கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலையே வந்து இருந்து எல்ல வேலையும் இழுத்து போட்டு செஞ்சுட்டு போவாங்க , பாசக்கார பயலுங்க . ஆனா அதே நீ பொண்ண கட்டிகுடு , பையன கல்யாணம் பண்ணிகுடுனு மட்டும் அந்த குடும்பத்துல கேட்டுட அவ்வுளவுதான் . ஒரு ருத்ரதாண்டவமே நடக்கும் .
                  வசூல் ராஜா MBBS  ல கமல்ஹாசன் சொல்லுற மாதிரி , என்னோட பொருள் எல்லாம் நீ use  பண்ணிக்கலாம் , உன்னோடத எல்லாம் நான் use  பண்ணிக்குவேன் ஆனா " உன்னோட ஜட்டிய நான் தொட மாட்டேன் , அதே மாதிரி என்னோட ஜட்டிய நீ தொட கூடாது " ஜென்டில்மேன் அக்ரீமென்ட் . என்ன கொடுமை இதெல்லாம்?  அப்போ சாதி என்ன ஜட்டி மாதிரியா? . சாதியே இல்லைங்கிறேன் அப்புறம் என்ன? 
            இப்போ புரியுதா சார் , இந்த 21 ஆம் நூற்றாண்டுல சாதி ஒரு உயிர் கொல்லி நோய் போலதான் இருக்கு . வெளிய தெரியாது ஆன உள்ளே தீயா இன்னும் எரிஞ்சுக்கிட்டு தான் இருக்கு .  

இதுதான் சார் இந்த போஸ்ட் தலைப்புக்கு காரணம் : சாதி = எய்ட்ஸ்  

                   இன்றைய  நிலைமைல பார்த்த உடனே யாரும் நீ என்ன சாதின்னு கேக்குறது இல்ல . ஆனா கொஞ்சம் பழகினதுக்கு  அப்புறம் , பேச்சு வாக்கில் , லைட் டா " அப்புறம் நீங்கே எல்லாம் என்னவங்க?"  அப்படின்னு ,  அதுக்கு நாம்ப ஒரு மாதிரி பார்த்த , " இல்ல எங்க இதுல எல்லாம் இப்படி பண்ணுவாங்க நாங்க இந்த ஆளுங்க , அதான் உங்க இதுல எப்படி பண்ணுவிங்கன்னு தெரிஞ்சுகத்தானன்னு " பொடி வைப்பார்கள்  ஆனா அது பொடி இல்ல வெடி . ஆதனால  எதாவது ஒரு தருணத்தில் கொஞ்சம் பேர் கேக்கத்தான் செய்கிறோர்கள் .அதுவும் இந்த தலை முறையினரே  கேக்குறாங்க சார் . அதுதான் ஆச்சிரியமாவும்  வெக்கமாவும் இருக்கு .
வெளிநாட்டு பிச்சைக்காரர் ......

                 பிச்சைகாரனுக்கு லட்டரில 1 கோடி பரிசு விழுந்தாலும் வெளிநாட்டுல போய் தங்க தட்டுல பிச்சை எடுக்கன்னும்ன்னு ஆசைப்படுவானம் . அந்த மாதிரி, என்னதான் டெக்னாலஜி வளர்ந்து கம்ப்யூட்டர்  , இன்டர்நெட் , ஈமெயில் , blogspot  எல்லாம் வந்தாலும் . கம்ப்யூட்டர்ல ஜாதகம் பார்க்குற மாதிரி .  இங்க ப்ளாக் ளையும் வந்து தன்னோட சாதி பற்றி புகழ்தோ  , இல்ல மற்ற சாதி பற்றி இக்ழல்ந்தோ ப்ளாக் , பின்னோட்டம் எழுதுறவங்கள , சண்டை போடுறவங்க  பார்க்கும் போது மனசு ரொம்ப வேதனைய இருக்கு . என்ன சாதி சண்டைய நியூ டெக்னாலஜில போடுறிங்களா? இதுக்குதான் டெக்னாலஜி  வளர்ச்சியா?  வெக்கமா இல்ல ? நீங்க எல்லாம் படிச்சவங்க ன்னு சொல்லிக்க ? என்னத்தையா அப்படி படிச்சிங்க? 

                 சரி சொல்லுங்க சார் , சாதி பெருசா ? மதம் பெருசா?

                                     சாதிதான் சார் பெருசு .

என்னையா இது? மதம்தான் எத்தனையோ சாதிகளை உள்ளடக்கியது , எத்தனை பெரிய அமைப்பு அது ,அத விட்டுட்டு சாதிதான் பெருசுன்னு சொல்லுறேன்னு கேக்குறிங்களா? சரி நான் உங்ககிட்ட ஒண்ணு கேக்குறேன் , இப்போ நினைச்ச உங்களால மதம் மாற முடியும். அதை மாறிய மதம் ஏற்றுக்கொள்ளும் , மக்கள் ஏற்றுகொள்வார்கள், அரசாங்கமும் ஏற்றுகொள்ளும் . மதம் மாறி, மாறிய மதத்துக்கான சான்றிதழும் நீங்கள் வாங்கலாம் அரசாங்கத்திடம் இருந்து . முழுவதும் அங்கீகரிக்க படும் .
                      ஆனால் செத்தா கூட சாதி மாற முடியாது அப்பு . எந்த சாதிக்காரனும் ஒத்துக்கமாட்டான், சாதி மாறினேன்னு சொன்னே அரசாங்கம் ஜெயில்ல புடிச்சு போட்டுடும் . அதிகபட்சம் லஞ்சம் குடுத்து போலி சாதி சான்றிதல் வேண்டுமென்றால்   வாங்கலாம் . அவ்வளவே , அதுக்கு மேல ஒரு ஹேர்ரையும் புடுங்க முடியாது . இப்போ சொல்லுங்க சாதிதானே பெருசு ? ? ?

எனது கனவு ? அடுத்த பதிவில். . . .

Note :  சாதி = எய்ட்ஸ்  (part-1) படிக்க இங்கே சொடுக்கவும் (click on)
http://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html

வேதனைகளுடன் ,
ராக்ஸ் . . . .

Tuesday, November 16, 2010 26 comments

                         
               ஆதி மனிதன் உடம்பெல்லாம் முடியோடு பிறந்தான் ,  ஆனால் இன்றைய மனிதனுக்கு பிறக்கும் போது உடம்பில் முடி இல்லை ஆனால் சாதி இருக்கிறது .முடித்தான் சாதியாக மாறி விட்டதோ?  சாதி முடிக்கே சமாணம் .  இன்றைய மனிதன் தனியாக பிறப்பதில்லை , சாதியோடுதான் பிறக்கிறான். எப்போது இருந்து இப்படி ? தெரியல . டிரஸ் போட ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் இப்படின்னு  நினைக்குறேன். அதுக்கு முன்னாடி மனிதன் மனதனாக இருந்தான்.
அப்போது எல்லாம் மனிதன் மிருகங்களிடத்தில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ளவே நேரம் சரியாய் இருந்தது. மிருகங்கள் மனிதன் கட்டுபாட்டுக்குள் கொண்டு  வந்த போது ( அதாவது மிருகங்கள் அழிய ஆரம்பித்த போது ... ) மனிதனுக்குள் இருந்த மிருகம் கண் விழிக்க ஆரம்பித்து  இருக்கும் என்று நினைக்குறேன்.

சாதி,  எப்படி இது வந்து இருக்கும்?  

              இது என்னோட சொந்த அனுமானம் , நான் படித்ததில் இருந்து , கேள்வி பட்டதில் இருந்து சொல்ல்கிறேன் .

                பண்டைய காலத்தில் மனிதன் நாகரிக வளர்ச்சி அடைய ஆரம்பித்த காலத்தில் , அவன் அவன், அவன்  அவனுக்கு முடிந்த , தெரிந்த வேலையை ( தொழில் ) செய்ய ஆரம்பித்தார்கள்.  விவசாயம், நெசவு , திருப்பணி , துணிகளை வெளுப்பவர்கள் , பாத்திரம் செய்வது , வியாபாரம், கட்டிட வேலை   இப்படி ஏகப்பட்ட வேலை . அப்போது அவர்களை அடையாள படுத்துவதற்காக அவர்கள் செய்யும் தொழில் பெயரை சொல்லி  அழைக்க , அடையாள படுத்த  ஆரம்பித்தார்கள் என்று நினைக்குறேன் . அதுவே சாதியாக மாறிவிட்டது , அதுவே குல தொழில் ஆனது.
                        உதாரணத்துக்கு  நான் சின்ன வயசா  இருக்கும் போது என்னோட பக்கத்துக்கு வீட்டுல மிட்டாய் செய்யும் குடுப்பம் குடி இருந்தார்கள் . வீட்ல மிட்டாய் செய்து கடைகளுக்கு விநியோகிப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு போனால் எப்போதும் மிட்டாய் வாசம் அடிக்கும் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, தொண்டை இனிக்கிறது . எப்போ போனாலும் பாசத்தோட மிட்டாய் குடுப்பார்கள். அவர்கள் வீட்டு  பையனோடதான் நான் பெரும்பாலும் விளையாடுவேன். அதனால என்னோட வீட்டுல எங்கடா போன அப்படின்னு கேட்டா மிட்டாய்காரங்க வீட்டுல விளையாண்டுக்கிட்டு இருந்தேன் அப்படின்னு சொல்லுவேன் . வீட்டுலயும் அப்படிதான் , என்னை எங்கன்னு கேட்டா மிட்டைகரங்க வீட்டுல விளையாண்டுகிட்டு  இருப்பான் அப்படின்னு சொல்லுவாங்க. அந்த தெருவில் எல்லாரும் அப்படிதான் சொல்லுவாங்க மிட்டாய்காரங்க   வீடுன்னு . அது அவர்கள் செய்யும் தொழில் , அது ஒரு அடையலாம் அவர்களுக்கு அவ்வளவே.  
             அப்படிதான் மற்ற தொழில் செய்பவர்களுக்கும் ஆதி காலத்தில் அவர்கள் செய்யும் தொழிலை பொருத்து அடையாள படுத்த பட்டார்கள்.  ஒரு தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த ஒருவன் அவனுக்கு பிடித்த , முடிந்த தொழில் செய்யும் போது அவன் அந்த தொழில் செய்பவன் ஆகிறான், ஆனால், உதரணத்துக்கு  விவசாயம் செய்யும் ஒருவன் குடும்பத்தில் பிறந்த ஒருவன்  , துணி நெய்தாலோ , இல்லை வேற தொழில் செய்தலோ அவன் அந்த தொழிலை சார்ந்தவன் ஆகிறான். அது அவன் சொந்த விருப்பம் , ஆனால் அவன் ஒரு தொழில் செய்யும் குடுபத்தில் பிறந்து , அவன் அவனுடைய குல தொழில் செய்யாமல் வேற தொழில் செய்தால் அவன் அந்த தொழில் சார்ந்த சாதி என்று இந்த சமுதாயம் ஒத்துக்கொள்ளுமா?   அவன் அந்த தொழிலை செய்பவன் , அந்த சாதி என்று ஒத்துக்கொள்ளுமா? . இல்லை
                  உதாரணத்துக்கு இன்றைக்கு பெரிய காலணி செய்யும் நிறுவனத்தின் உரிமையளர் அந்த சாதி சேர்த்தவர் என்று சொல்ல முடியுமா? இல்லை இன்று வியாபாரம் செய்யும் எல்லாரும் அந்த அந்த சாதியை சேர்ந்தவர்கள்தான? 

    சரி அப்போ ஒருவன் பிறந்த குடும்பத்தின் குல தொழில் தான் சாதி என்றால் , ஏதோ ஒரு தலை முறைலதான் அவங்க அந்த தொழிலை ஆரம்பிச்சு இருப்பாங்க . அதனால இப்போ அதே வழிக்கு வரேன் , இப்போ ஒருத்தர் டாகடர் , அவருக்கும் அவர் மனைவிக்கும் ஒரு குழந்தை பொறக்குது , இப்போ அந்த டாக்டர் அவரோட குழந்தைய கொண்டு போய் தாசில்தார் ஆபீஸ்ளையும் , university ளையும் போய் தன்னோட குழந்தையும் டாக்டர் அப்படின்னு பதிவு செய்ய முடியுமா? அதை இந்த சமுதாயம் ஏற்குமா? இந்த அரசாங்க அதை ஒத்துக்கொண்டு அந்த குழந்தையும் டாக்டர் தான் அப்படின்னு சர்டிபிகேட் குடுக்குமா?
         என்னையா  இது முட்டாள் தனமா இருக்கு நீ டாக்டர் என்கிறதுக்காக உனக்கு பொறந்த குழந்தையும் டாக்டர் ஆகுமா ? அப்படியென்று கேட்க மாட்டாங்க , அவரை ஏளனம் செய்ய மாட்டாங்க ?
இதே மாதிரி engineer  குழந்தை engineer என்று சொல்ல முடியுமா?
வக்கீல் குழந்தை , வக்கீல் என்று   சர்டிபிகேட் வாங்க முடியுமா?
அதற்கான கல்வியை முறையாக படித்து பட்டம் வாங்கினால் மட்டுமே அந்த குழந்தை டாக்டர் ஆகவோ , engineer  ஆகவோ , வக்கீல் ஆகவோ இல்ல இன்னும் மற்ற துறையை சார்ந்த நிபுணர் ஆகவோ அங்கீகரிக்க படுக்கிறது , இந்த சமுதாயத்தாலும் , மக்களாலும் ஏற்று கொள்ள படுகிறது , இல்லையென்றால் அவன் போலி ஆகிறான் . போலி டாக்டர் , போலி வக்கீல் போல , இல்லையா?
பெயர்க்கு பின்னால் போட்டுக்கொள்ள,  இல்ல சொல்லி கொள்ள , சாதி என்ன படித்து வாங்கின பட்டமா?
அப்போறம் எப்படியா ஒருவனுக்கு பொறந்த குழந்தை ஒன்னுமே பண்ணாம அந்த அப்பனுடைய  சாதிய சேர்ந்தது ன்னு சொல்லுரிங்க?
அந்த குழந்தை அந்த அப்பனுக்கு பொறந்தது என்பதற்காக மட்டுமே ?
பைத்தியகார தனமா இல்ல?
எங்கே இருந்து ஆரம்பிச்சு இருந்தா சாதி , சாதி வெறி ? தெரியல எங்கையோ , எப்போவோ , ஏதோ ஒரு சுயநலம் படைத்த கூட்டம் இதை ஆரம்பித்து இருக்க வேண்டும் . அவர்களின் சொந்த லாபத்திற்காக ஆரம்பித்த சதி வேலை இது . உயர்ந்த சாதி , தாழ்ந்த சாதி , நடு சாதி அப்படின்னு .  சரி சாதியே இல்லைக்குறேன் அப்புறம்  என்ன உயர்ந்த , தாழ்ந்த , எல்லாம்? 

இன்னும் விரிவாக மற்றும் தலைப்பின் காரணத்தையும் அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

எனது கனவு ? அடுத்த பதிவில் :

சாதி = எய்ட்ஸ்  (part-2) படிக்க இங்கே சொடுக்கவும் (click on)
http://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html



வேதனைகளுடன் ,
ராக்ஸ் . . . .

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters