சரியா இன்று ( 18-Oct-2011) பதிவுலகில் வெற்றிகரமாக ( !! ??? )இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் . போன வருடம் இதே நாள் ஏதோ விளையாட்டாய் ஆரம்பித்தது இன்றோடு ஒரு வருடம் முடிந்து விட்டது. இந்த ஒரு வருடத்தில் அப்படி ஒன்றும் பெரிசா எழுதி சாதிக்கவில்லை என்றுதான் நினைக்கிறன் . ஆனால் நான் என்னுடைய முதல் பதிவில் சொன்னது போல யாருடைய மனதையும் புண்ப்படுத்தாமல் இதுவரை எழுதி வந்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன் , இனிமேலும் அப்படியே. என்னை அறியாமல் அப்படி யாரையேனும் புண்படுத்தி இருந்தால் கனிவாக மன்னித்து விடுங்கள். என்னை இது வரை ஆதரிதவர்களுக்கும் , அங்கிகரித்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
இந்த இனிமையான தருணத்தில் , என்னை முதல் முதலாய் என்னை அங்கிகரித்தவர்களைம் , ஆதரித்தவர்களையும் நினைவு கூறவும் , நன்றி சொல்லவும் கடமைப்பட்டு இருக்கிறேன் . ஏனென்றால் எப்பவுமே முதலில் கிடைப்பதற்கு ஒரு தனி சிறப்பு உண்டு , முதல் காதல் , மழலையின் முதல் பேச்சு , முதல் முத்தம் போன்று .
1) என்னையும் ஒரு ஆளாய் மதித்து இவனும் ஏதாவது எழுதுவான், எதுக்கும் follow பண்ணுவோம் என்று join செய்த முதல் follower நண்பர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களுக்கு நன்றி .
2) மிக பிரபல பதிவர் ஆனாலும் எந்த வித தாக்கமும் இல்லாமல் , அக்கறையுடன் எனது முதல் பதிவுக்கு மதிப்பளித்து பின்னூட்டம் இட்டு வாழ்த்திய நல்ல உள்ளங்கள் பனித்துளி சங்கர் அவர்களுக்கும் , தமிழ்த்தோட்டம் அவர்களுக்கும் நன்றிகள் .
3) நான் பதிவு எழுத ஆரம்பித்த இரண்டாவது மாதத்திலையே அட இவனும் என்னமோ எழுதுறான் எல்லாரும் கொஞ்சம் வந்து பாருங்க என்று என்னை முதல் முதலில் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய அருமை நண்பர் அருண் பிரசாத் அவர்களுக்கு நன்றி
4) நான் புதிய பதிவர் ஆனாலும் என் மேல் நம்பிக்கை வைத்து என்னையும் முதல் தொடர்ப்பதிவு ❅கமல்ஹாசன் கோல்டன் ஹிட்ஸ் - 10❅
எழுத அழைத்த நண்பர் Philosophy பிரபாகரன் க்கு நன்றி .
அது மட்டும் அல்லாது என்னை இரண்டாவது முறை வலைச்சரத்தில் ஆறுமுகப்படுத்தி, பெருமைப்படுத்திய லக்ஷ்மி அம்மா அவர்களுக்கும் எனது நன்றிகள் .
இந்த ஒரு வருடத்தில் மொத்தமே 33 பதிவுகள்தான் எழுதி இருக்கிறேன் . இது ஒரு பிரபல பதிவர் ஒரு மாதத்தில் எழுத்தும் எண்ணிக்கை. என்னவோ என்னால் அவ்வுளவுதான் எழுத முடிந்தது . என்னை பொருத்தவரை எண்ணிக்கையை விட நல்ல தரமான பதிவுகளை இடுவதுலையே உடன்பாடு. ஒவ்வொரு பதிவு எழுத்தும் போதும் கண்டிப்பாக இந்த பதிவு கண்டிப்பாக சிரிக்க வைக்க வேண்டும் அல்லது சிந்திக்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பேன் . இந்த வருடத்தில் ஏதோ கொஞ்சம் சிந்திக்க வைக்கும் விழிப்புணர்வு பதிவுகளை எழுதி இருக்கிறேன் . நண்பர்களை நிறைய சிரிக்கவும் வைத்திருக்கிறேன் என்று நம்புகிறேன் .
நான் எழுதிய பதிவுகளிலையே குளிக்கும் போது சோப்பு நழுவாம குளிப்பது எப்படி ? என்கிற பதிவுதான் இதுவரை அதிக அளவில் பெரும்பாலானவர்களால் படித்து வயுறு வலிக்க சிரிக்க வைத்த பதிவு . செம ஹிட் . நானே எதிர் பார்க்கவில்லை. இந்த பதிவு என் இவ்வளவு ஹிட் ஆகியது என்று நான் யோசித்து பார்த்த போது எனக்கு காரணம் கிடைத்தது அது ஒண்ணும் இல்லைங்க நான் பதிவு எழுத சரியான கருவும் யோசனைகளும் எங்கு கிடைக்கும் என்று கேட்டால் சிரிப்பீர்கள் . நிஜமாவே நான் தினமும் ஷவரில் குளிக்கும் போது தான் பதிவுக்கான யோசனையும் , கருவும் கிடைக்கிறது . ஹி ஹி . .
இதே போல் நல்ல தரமான சிரிக்கவும் , சிந்திக்கவும் வைக்கும் பதிவுகளை தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். அதற்க்கு நண்பர்களாகிய உங்களின் ஆதரவும் , உக்கமும் கண்டிப்பாக தேவை. கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையுடன் . நன்றி நன்றி நன்றி
இந்த பதிவை என்னை அங்கிகரித்த , ஆதரிக்கும் நல்ல உள்ளங்களுக்கு சமர்பிக்கிறேன் .
மனமார்ந்த நன்றிகளுடன் ,
ராக்ஸ்
48 comments:
தொடர்ந்து நீங்கள் வெற்றிக் கனிகளைப் பறிக்க இந்த ஜூனியரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வாத்துக்கள் அப்பு!
//நிஜமாவே நான் தினமும் ஷவரில் குளிக்கும் போது தான் பதிவுக்கான யோசனையும் , கருவும் கிடைக்கிறது . ஹி ஹி///
இதனால் தாங்கள் கூற விரும்பும் கருத்து?
நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்!......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
///@//நிஜமாவே நான் தினமும் ஷவரில் குளிக்கும் போது தான் பதிவுக்கான யோசனையும் , கருவும் கிடைக்கிறது . ஹி ஹி///
இதனால் தாங்கள் கூற விரும்பும் கருத்து? ///
டெய்லி நான் குளிக்கிறேன் என்பதை இந்த உலகுக்கு எந்த வித கர்வமும் இல்லாமல் அறிவித்து கொள்கிறேன் .
நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய கருத்து இந்த தீபாவளிக்காவது குளிக்கப்பா , நாடு முன்னேறட்டும் .
//@கணேஷ் said...
தொடர்ந்து நீங்கள் வெற்றிக் கனிகளைப் பறிக்க இந்த ஜூனியரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! ////
வருகைக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி சார் . தொடர்ந்து வாருங்கள் . .
///@வெளங்காதவன் said...
வாத்துக்கள் அப்பு!///
அப்புதானே ? ஆப்பு எதுவும் இல்லையே ? ????
///@Kannan said...
நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்!...... ///
நன்றி கண்ணன் . .
இரண்டாம் ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகள்.. நிறைய பதிவுகள் நீங்கள் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.. மீண்டும் வாழ்த்துகளுடன்..
எங்கள் வலைப்பூவின் ஆரம்ப நாட்களில் ஆதரவு தந்தமைக்கு மிக்க நன்றிகள்..
/////@வெளங்காதவன் said...
வாத்துக்கள் அப்பு!///
அப்புதானே ? ஆப்பு எதுவும் இல்லையே ? ???? ////
இல்ல அப்பு!
கலக்குங்கோ!
வெற்றிகரமான ஆண்டு நிறைவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து வருகிறோம்
இதுபோல் தரமான பதிவுகளாகவே தொடர்ந்து தர வாழ்த்துக்கள்
தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் ராஜேஷ்
என்னையும் ஒரு ஆளாய் மதித்து இவனும் ஏதாவது எழுதுவான், எதுக்கும் follow பண்ணுவோம் என்று join செய்த முதல் follower நண்பர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களுக்கு நன்றி .//
மச்சி இதுக்கே எனக்கு நீ ட்ரீட் தரனும். இரண்டாம் வருடத்துக்கு வாழ்த்துக்கள் மச்சி
//நிஜமாவே நான் தினமும் ஷவரில் குளிக்கும் போது தான் பதிவுக்கான யோசனையும் , கருவும் கிடைக்கிறது . ஹி ஹி///
இதனால் தாங்கள் கூற விரும்பும் கருத்து?//
பதிவு எழுதுற அன்னிக்கு மட்டும் குளிக்கிராராமாம்.
congrats , keep writing good
avanishiva
இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் உங்களிற்கு அன்பான வாழ்த்துக்கள். இன்றுபோல என்றும் பதிவுலகில் இணந்திருக்க வேண்டிக்கொள்கிறேன்
ராஜா மேலும் மேலும் தரமான பதிவுகள் கொடுத்து எல்லோரையும் சந்தோஷப்படுத்த வாழ்த்துக்கள். ட்ரீட் கிடையாதா?
வாழ்த்துக்கள்
கலக்கி எடுங்க .. வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் ராஜேஷ்..!
//என்னை பொருத்தவரை எண்ணிக்கையை விட நல்ல தரமான பதிவுகளை இடுவதுலையே உடன்பாடு. //
அருமை ராஜேஷ்.
வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் எழுத்து.
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
oh my god . . . கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் ஊரு சுத்திட்டு வர்றதுக்குள்ள இத்தனை வாழ்த்துக்களா?
//@பாரத்... பாரதி... said...
இரண்டாம் ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகள்.. நிறைய பதிவுகள் நீங்கள் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.. மீண்டும் வாழ்த்துகளுடன்..///
நன்றி பாரத் . .
//@ Ramani said...
வெற்றிகரமான ஆண்டு நிறைவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து வருகிறோம்
இதுபோல் தரமான பதிவுகளாகவே தொடர்ந்து தர வாழ்த்துக்கள் ///
ரொம்ப நன்றி சார் , கண்டிப்பா ஜனரஞ்சகமான சிரிப்பை அள்ளும் பதிவுகளையும் , தரமான பதிவுகளையும் தொடர்ந்தது எழுத முயற்சிக்கிறேன் . .
///Sahana said...
தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் ராஜேஷ் ///
தேங்க்ஸ் சஹானா . .
///@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என்னையும் ஒரு ஆளாய் மதித்து இவனும் ஏதாவது எழுதுவான், எதுக்கும் follow பண்ணுவோம் என்று join செய்த முதல் follower நண்பர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களுக்கு நன்றி .//
மச்சி இதுக்கே எனக்கு நீ ட்ரீட் தரனும். இரண்டாம் வருடத்துக்கு வாழ்த்துக்கள் மச்சி ///
மச்சி ஒரு குவோட்டார் சொல்லேன் . .
///@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இதனால் தாங்கள் கூற விரும்பும் கருத்து?//
பதிவு எழுதுற அன்னிக்கு மட்டும் குளிக்கிராராமாம்.///
அது சரி நாமதான் என்னைக்குமே குளிக்குறது கிடையாதே இல்ல போலீஸ்கார் ?, எல்லாம் பொறாமை , பொறாமை . .
/// @Avani Shiva said...
congrats , keep writing good
avanishiva ///
தேங்க்ஸ் சிவா . .
///@அம்பலத்தார் said...
இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் உங்களிற்கு அன்பான வாழ்த்துக்கள். இன்றுபோல என்றும் பதிவுலகில் இணந்திருக்க வேண்டிக்கொள்கிறேன் ///
அம்பலத்தார் தீர்ப்புக்கு கட்டுப்படுறேன் சாமியோ . .
// @Lakshmi said...
ராஜா மேலும் மேலும் தரமான பதிவுகள் கொடுத்து எல்லோரையும் சந்தோஷப்படுத்த வாழ்த்துக்கள். ட்ரீட் கிடையாதா?///
அவ்வவ் அம்மா நன்றி அம்மா , உங்க ஆசிர்வாதம் எப்பவும் இருக்கணும் .
அப்புறம் ட்ரீட் என்ன பண்ணலாம்?
நீங்களே சொல்லுங்கோ . .
///@Speed Master said...
வாழ்த்துக்கள் ///
ஸ்பீடா வந்து ஸ்பீடா கமெண்ட் போட்டுட்டு , ஸ்பீடா போயிட்டிங்க போல ?
அது சரி பெயருக்கு எத்த மாதிரிதானே இருபிங்கா? ஹி ஹி
நன்றி நண்பரே . .
//@அரசன் said...
கலக்கி எடுங்க .. வாழ்த்துக்கள் ///
already கலக்கோ கலக்குன்னு கலக்கி பேதி ஆனதைதான் ஏற்கனவே ஒரு பதிவு போட்டுட்டேன் படிக்கலையா நீங்க ? ஹி ஹி
நன்றி நண்பரே . .
//@ப்ரியமுடன் வசந்த் said...
வாழ்த்துகள் ராஜேஷ்..!//
நன்றி மச்சி . .
///@RAMVI said...
//என்னை பொருத்தவரை எண்ணிக்கையை விட நல்ல தரமான பதிவுகளை இடுவதுலையே உடன்பாடு. //
அருமை ராஜேஷ்.
வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் எழுத்து.///
தேங்க்ஸ் மேடம் , தொடர்ந்து ஆதரவு தாருங்கள் . . .
///@விக்கியுலகம் said...
மனமார்ந்த வாழ்த்துக்கள்! ///
மாப்ளே நன்றி , வேற என்ன சொல்ல ?
ஹாப்பி ப்ளாக் டே டூ யூ!
வாழ்த்துக்கள் நண்பா... என் பெயரையும் குறிப்பிட்டிருப்பதை படிக்கும்போது புல்லரிக்கிறது...
வாழ்த்துக்கள் சகோதரம் தொடர்ந்து வெற்றி நடை போடுங்கள்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்
ஏன் இந்த வெளம்பரம்? அந்த சினிமாக்காரனுங்கதான் வருசா வருசம் கொண்டாடி ஊர நாறடிக்கிறானுங்கன்னா நீயுமா....
////என்னையும் ஒரு ஆளாய் மதித்து இவனும் ஏதாவது எழுதுவான், எதுக்கும் follow பண்ணுவோம் என்று join செய்த முதல் follower நண்பர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களுக்கு நன்றி .//////
கொடூரமான அனுபவமா இருக்கே?
///// நிஜமாவே நான் தினமும் ஷவரில் குளிக்கும் போது தான் பதிவுக்கான யோசனையும் , கருவும் கிடைக்கிறது .///////
அப்படியே ஆம்லேட் போட்டு வைய்யா..... (ஆமா மக்ல அள்ளி ஊத்தி குளிச்சா அந்த கரு வராதோ?)
///// நன்றி நன்றி நன்றி/////
இதுக்கு முன்னாடி மிமிக்ரி ப்ரோகிராம் பண்ணிக்கிட்டு இருந்தியா?
வாழ்த்துக்கள்
ஆஹா குரு............ என்னது! நீங்க எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷம் தான் ஆகுதா? ஆனா உங்க எழுத்து திறமைய பார்த்தா பல வருஷ அனுபவம் தெரியுது! வாழ்த்துக்கள் குரு சார் கலக்குங்க ...............
\\\\\இது ஒரு பிரபல பதிவர் ஒரு மாதத்தில் எழுத்தும் எண்ணிக்கை. என்னவோ என்னால் அவ்வுளவுதான் எழுத முடிந்தது . என்னை பொருத்தவரை எண்ணிக்கையை விட நல்ல தரமான பதிவுகளை இடுவதுலையே உடன்பாடு////
சரியா சொன்னீங்க. அழகா சொன்னீங்க
வாழ்த்துகள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ராஜேஷ்.
Post a Comment