Followers

Monday, July 18, 2011


சமச்சீர் கல்வி தொடர்பான தமிழக அரசின் சட்ட திருத்தம் ரத்து
- உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு (18-07-2011)
           
             ஒன்று  முதல் பத்தாம் வகுப்புவரையானா அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் பாட திட்டத்தையே நடத்த வேண்டும் . வரும் 22 ம் தேதிக்குள்  சமச்சீர் பாட நூல்களை விநியோகம் செய்யவேண்டும் . சமச்சீர் கல்வியை இந்த நடப்பு கல்வி ஆண்டே நடை முறை படுத்த வேண்டும் என்று உயர் நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பளித்து உள்ளது . 

        கடந்த ஆட்சியில் சமச்சீர்கான கல்வியாளர்கள் குழு அமைக்க பட்டு ஆய்வு செய்தது , அவர்களின் ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவர பட்டது , அதற்கான சமச்சீர் பாட நூல்களும் அச்சடிக்க பட்டன. ஆனால் ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும் .
மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் அறிதிபெரும்பான்மை வாக்குகள் பெற்று ஆட்சிக்கு வந்த எங்கள் புரட்சி தலைவி அம்மா அவர்கள்  வந்த உடன் செய்த முதல் காரியங்க மக்கள் நலன் கருதி பல நல்ல திட்டங்களையும் , மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளையும் கையில் எடுத்து . . . மன்னிக்கவும் ஒரு flowல எழுதிட்டேன் .  கடந்த ஆட்சியில் வந்த  நல்லதோ கெட்டதோ,  எல்ல திட்டங்களையும் ரத்து செய்ய முடிவு செய்தது களத்தில் தொபுக்கடி என்று குதித்து பட்டைய கிளப்பினார் . .
அதில் ஒன்று தான் இந்த சமச்சீர் கல்வி . இதை ரத்து செய்தது சட்ட மசோத ஏற்றி , இனி  பள்ளிகளுக்கு பழைய பாட திட்ட முறையே பின்பட்டற படும் என்று அறிவித்தார் .
          அனால் இதை எதிர்த்து போடப்பட்ட பொது நல வழக்கில்தான் இந்த பரபரப்பான தீர்ப்பு . . .

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய போவதாக தமிழக அரசு வக்கீல் தெரிவித்துள்ளார் . ( மறுபடியுமா ? பசங்க படிச்சா மாதிரி தான் . . .)
ஆனா ஒன்னு சொல்லிக்கிறேன் மக்க , இந்த தீர்ப்பை பார்த்து எல்லாம் எங்க புரட்சி தலைவி மனம் தளர்ந்து பாட மாட்டங்க . ஒரு ஆப்பு உடைஞ்சு போச்ச? அடுத்த ஆப்பு ரெடி பண்ணு மாஸ்டர் அப்படின்னு நெக்ஸ்ட் ஆப்புக்கு ஆர்டர் குடுத்துட்டு போய்கிட்டே இருப்பாங்க . நாங்க எல்லாம் யாரு . . .


சும்மா ஒரு தீர்ப்பு வந்துடுச்சுன்னு சும்மா ஆட்டம் போட வேண்டாம் . அதை பத்தி பீல் பண்ணுரா கேரக்டரே கிடையாது எங்கள் அம்மா . . . எத்தன வழக்கை பார்த்து இருப்போம் , எத்தன தீர்ப்பை பார்த்து இருப்போம் .

உனக்கும் பெப்பே , உங்க அப்பனுக்கும் பெப்பே தான் 

ஆனா எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான் சார் , இந்த மாதிரி எல்லாம் ஏன் நான் ஸ்கூல் படிக்கும் போது நடக்கல ?

அப்போ ஏன் இப்படி யாரும்  யோசிக்கலா ? சட்டம் கொண்டு வரல புக்ஸ் நிறுத்தி வைக்கலா , என்னை என்ஜாய் பண்ண விடல ?

ஜூன் முதல் வாரமே பள்ளிக்கூடம் திறந்து உசுர வாங்குவாங்க , ஆனா இப்ப பாருங்க ஜூலை மாதம் முடிய போகுது இன்னும் பசங்க பாட புத்தகத்தையே கைல தொடாம என்ஜாய் பண்ணுறாங்க அத நினைச்சாத்தான் எனக்கு காண்டாகுது . . .

எனக்கு மட்டும் என் சார் இப்படி எல்லாம் நடக்குது

Always , 


ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com


3 comments:

Unknown said...

ஹே டண்டனக்கா டணக்குனக்கா!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@விக்கியுலகம் said...

ஹே டண்டனக்கா டணக்குனக்கா!///

என்ன ஆட்டம்? . . .

Unknown said...

ஹே ஆடுங்கட என்ன சுத்தி

அய்யனாரு வெட்டுக்கத்தி..

ஹே ஆடுங்கட என்ன சுத்தி ...

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters